Asianet News TamilAsianet News Tamil

உல்லாசமாக இருந்த போது பெவிகுவிக்கை ஊற்றிய சாமியார்! ஆணின் மர்ம உறுப்பு துண்டிப்பு! பெண்ணின் உறுப்பிலும் வெட்டு

காதல் ஜோடி கவுரவக் கொலை செய்யப்பட்டதாக கருதப்பட்ட நிலையில் தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கள்ளக்காதல் ஜோடியை பிரிக்க சாமியார் செய்த சதி வேலை என்பது அம்பலமாகியுள்ளது. 

udaipur double murder case...police arrested tantrik Bhalesh Kumar
Author
First Published Nov 23, 2022, 3:01 PM IST

காதல் ஜோடி கவுரவக் கொலை செய்யப்பட்டதாக கருதப்பட்ட நிலையில் தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கள்ளக்காதல் ஜோடியை பிரிக்க சாமியார் செய்த சதி வேலை என்பது அம்பலமாகியுள்ளது. 

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டம்  மஜாவாட் கிராமத்தில் இளைஞர் மற்றும் இளம் பெண்ணின் சடலங்கள் நிர்வாண நிலையில் ஆணின் உறுப்பு வெட்டப்பட்டும், பெண்ணின் பிறப்புறுப்பில் காயம் இருந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சோனு சிங் (28) மற்றும் ராகுல் மீனா (30) என்ற பெண் என்பது தெரியவந்தது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கவுரவக் கொலையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இந்த கொலை ராஜஸ்தான் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. 

இதையும் படிங்க;- சரக்கடிக்க பணம் தர மாட்டேனு சொன்ன மனைவி.. தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கி கொன்னுட்டேன்! கணவர் பகீர் வாக்குமூலம்

udaipur double murder case...police arrested tantrik Bhalesh Kumar

இந்நிலையில், இந்த விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த  சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பதிவில் சாமியார் பாலேஷ் குமார் வந்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து, அந்த சாமியரை போலீசார் கைது செய்த விசாரணை நடத்தினர். விசாரணையில் இருவரையும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். 

இந்த கொலை குறித்து சாமியார் போலீசில் அளித்த வாக்குமூலத்தில்;- அப்பகுதியில் பாலேஷ் குமார் என்ற சாமியார் இருந்து வந்துள்ளார். பொதுமக்கள் தங்கள் கஷ்டங்களை கூறி நிவர்த்தி செய்ய உதவி கேட்டு வந்துள்ளனர். சோனு சிங் என்ற இளம்பெண்ணின் திருமண வாழ்க்கையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், தொடர்ந்து அவர் அங்கு வந்து செல்வது வழக்கம். இளைஞரான ராகுல் மீனாவும் சாமியாரிடம் வந்து சென்றார். அப்போது, சோனு சிங் ராகுல் மீனாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்த விவகாரம் ராகுல் மனைவிக்கு தெரியவந்ததை அடுத்து குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

udaipur double murder case...police arrested tantrik Bhalesh Kumar

இவர்கள் இருவரையும் பிரிக்க ராகுல் மனைவி சாமியரை நாடியுள்ளார். இதனால் சாமியார் தனது பெயர் கெட்டுவிடும் என நினைத்து கள்ளக்காதல் ஜோடியை பிரிந்து விடுமாறு கூறியுள்ளார். ஆனால், அவர்கள் கேட்கவில்லை. இதனால், இருவரையும் தீர்த்து கட்ட சாமியார் திட்டம் தீட்டினார். பெவிகுவிக்கை வாங்கி அதனை ஒரு பாட்டலில் சேகரித்துள்ளார். பின்னர்,  ராகுலையும், சோனுவையும் அழைத்த சாமியார் நீங்கள் எந்த சூழலில் பிரியாமல் இருக்க வேண்டும் என்றால் உல்லாசமாக இருக்க வேண்டும் என்றார். இதனை நம்பிய அவர்கள் தனிமையில் உல்லாசத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென வந்த சாமியார் உல்லாசமாக இருந்தவர்கள் மீது பெவிகுவிக்கை ஊற்றியுள்ளார். இதனால், இருவரும் ஒட்டிக்கொண்டதால் வெளியே எடுக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளனர். பின்னர்,  கத்தி மற்றும் கற்களால் தாக்கி இருவரையும் கொலை செய்து உள்ளார் என கூறப்படுகிறது. கத்தி, கற்கள் மற்றும் கூர்மையான ஆயுதத்தாலும் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது. 

இதையும் படிங்க;-  அந்தரங்க உறுப்பில் பிளேடால் பெயரை எழுத சொல்லி டார்ச்சர்... பெண் கொடுத்த புகாரின் பேரில் இளைஞர் கைது!!

Follow Us:
Download App:
  • android
  • ios