மார்த்தாண்டம் அருகே உள்ள குளக்கச்சியை சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 36). மனைவி கார்த்திகா (22). இவர்களுக்கு 4 வயதில் சஞ்சனா என்ற மகளும், 1½ வயதில் சரண் என்ற மகனும் உண்டு. கள்ள காதல் காரணமாகக் குழந்தைகளைக் கொல்ல முயன்றார்.

இதில் ஒன்றரை வயது மகன் சரண் பலியானான். 4 வயது மகள் சஞ்சனா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கார்த்திகாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் செய்து தக்கலை பெண்கள் கிளை சிறையில் அடைத்தனர். பின்னர் கார்த்திகாவின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அப்போது கார்த்திகா அவருடைய கள்ளக்காதலனிடம் ஒரு நாளைக்கு 15 தடவைக்கு மேல் பேசியிருந்தது தெரியவந்தது. அதுவும் அவரிடம் மணிக்கணக்கில் பேசியது தெரிய வந்துள்ளது. கள்ளக்காதலனுடன் செல்போனில் பேசும் நேரங்களில் கார்த்திகா தன்னை ஆபாசமாக வீடியோ எடுத்து அதை வாட்ஸ் அப்பில் கள்ளக்காதலனுக்கு அனுப்பி உள்ளார். 

மேலும் கார்த்திகாவின் செல்போனில் ஏராளமான வீடியோக்களும் இருந்தன. அதில் கார்த்திகா ஆபாசமாக இருக்கும் வீடியோக்களே அதிகமாக இருந்தன. கார்த்திகா குளிக்கும்போதும் உடை மாற்றும் போதும் வீடியோக்களாக பதிவாக்கி கள்ளக்காதலனுக்கு அனுப்பி வைத்துள்ளார். 3 மாதமாக தான் அவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். அந்த நேரங்களில் அவர்கள் பல இடங்களுக்கு சென்று ஜாலியாக சுற்றியுள்ளனர். 

போலீஸ் நிலையத்தில் கள்ளகாதலனிடம் விசாரணை நடத்தியபோது அவருக்கு ஒன்றும் தெரியாது. எனக்கு திருமணம் ஆகவில்லை என்பதால்தான் அவர் என்னுடன் பழகினார். அவரை விட்டுவிடுங்கள். கஷ்டப்படுத்தாதீர்கள் என்று தனது கள்ளக்காதலனுக்காக அந்த நிலையிலும் பரிந்து பேசினார். இரக்கமற்ற தாயான கார்த்திகா தற்போது தக்கலை கிளை சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். தற்போது கார்த்திகா சிறையில் அழுது கொண்டேயிருப்பதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க : சைக்கிள் வேணுமா உனக்கு..? சைக்கிள் கேட்ட 9 வயது மகளை கொடூரமாக தாக்கிய தந்தை.. அதிர்ச்சி சம்பவம் !