Asianet News TamilAsianet News Tamil

திருவிழாவில் சிறுமிக்கு ஏற்பட்ட விபரீதம்.. காம கொடூரனை ‘அடித்தே’ கொன்ற பெண்கள்.. எங்கு தெரியுமா ?

5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நபரை, அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் அடித்தே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

The incident in which a man who sexually abused a 5 year old girl was beaten to death by women in the area has caused a great stir
Author
India, First Published Mar 18, 2022, 10:32 AM IST

திருவிழாவில் காணாமல் போன குழந்தை :

திரிபுரா மாநிலம் தலாய் மாவட்டத்தில் உள்ளது காண்டச்சேரா கிராமம். இந்த கிராமத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கோயில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை பார்ப்பதற்காக அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தனது 5 வயது குழந்தையை அழைத்துச் சென்றிருக்கிறார். 

The incident in which a man who sexually abused a 5 year old girl was beaten to death by women in the area has caused a great stir

இதனிடையே, நிகழ்ச்சி முடிவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு, கோயில் பிரசாதத்தை வாங்குவதற்காக தனது குழந்தையை அங்கேயே அமர வைத்துவிட்டு அந்தப் பெண் சென்றிருக்கிறார்.  இரண்டு நிமிடங்களில் அவர் திரும்பி வந்து பார்த்த போது, தன் குழந்தை மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அனைத்து இடங்களிலும் தேடி பார்த்தும் சிறுமி கிடைக்கவில்லை. அதே நேரத்தில், அந்த கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு நபரும் காணாமல் போனார். அவர் ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனையை முடித்து அண்மையில் தான் வெளியே வந்திருக்கிறார். 

அடித்தே கொன்ற பொதுமக்கள் :

எனவே, கிராம மக்கள் அவர் மீது சந்தேகித்தனர். அவரது வீட்டிலும் அந்த நபர் இல்லை. இந்த சூழலில், நேற்று காலை அங்கிருந்த ஒரு வனப்பகுதியில் அந்த சிறுமி ஆடை இல்லாமல் அழுது கொண்டிருந்ததை சிலர் பார்த்து, கிராமத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து அங்கு திரண்டு வந்த கிராம மக்கள் அந்த சிறுமியை மருத்துவமனையில் சேர்த்தனர். 

The incident in which a man who sexually abused a 5 year old girl was beaten to death by women in the area has caused a great stir

அதில், அந்த சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருந்தது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த அந்த கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள், தாங்கள் சந்தேகித்த நபரை தேட தொடங்கினர். அப்போது தனது உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த அவரை கண்டுபிடித்த அவர்கள், அவரை அடித்து வெளியே இழுத்து வந்தனர். 

பின்னர் அங்கிருந்த மரத்தில் அவரை கட்டி வைத்து, இரும்புக் கம்பி, பாறைக் கற்கள் உள்ளிட்டவற்றால் அவரை சரமாரியாக தாக்கினர். இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios