Asianet News TamilAsianet News Tamil

கணவனை பிரிந்து இளைஞனுடன் லிவிங் டுகெதர்...4 வரும் உல்லாசம்... காதலனை கொன்று சூட்கேசில் அடைத்த பெண்.

தனது லிவிங் டுகெதர் பார்ட்னர், தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் பெண் ஒருவர் அந்த இளைஞனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. 

The girlfriend who killed the living together partner because he refused to marry her
Author
Uttar Pradesh, First Published Aug 9, 2022, 7:53 PM IST

தனது லிவிங் டுகெதர் பார்ட்னர், தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் பெண் ஒருவர் அந்த இளைஞனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. உத்திரபிரதேச மாநிலம் டெல்லி எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் இந்த கொலை அரங்கேறியுள்ளது.

முழு விவரம் பின்வருமாறு:- டெல்லி எல்லையையொட்டி உள்ள துளசி நிகேதன் காலனியைச் சேர்ந்தவர் பிரீத்தி ஷர்மா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தீபக் யாதவ் என்பவருடன் திருமணம் நடந்தது. பின்னர் கருத்து வேறுபாடு காரனமாக கணவனை பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் ஃபிரோஸ் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் டுகதர் முறையில் வாழ்ந்து வந்தார். அடிக்கடி விருப்பப்படி உல்லாசம் அனுபவித்து வாழ்ந்து வந்தனர்.

The girlfriend who killed the living together partner because he refused to marry her

இதையும் படியுங்கள்: சாமியாரிடம் குழந்தை வரம் கேட்ட பெண்.. சேட்டை செய்த சாமியார் மிர்ச்சி பாபா ! காவல்துறை கைது !

இந்நிலையில் தனது பார்ட்னரை திருமணம் செய்து கொள்ளும்படி அந்தப் பெண் வற்புறுத்தினார், ஆனால் அந்த இளைஞன் தனது வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள் என கூறி மறுத்து வந்துள்ளார். இதனால் அந்த இளைஞருக்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது, அப்போது அந்த காதலன் அந்தப்பெண்ணை  மிகவும் இழிவாக பேசியதுடன், அந்தப் பெண்ணை நடத்தை கெட்டவள் என திட்டியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண் கோபத்தில் சமையல் அறையில் இருந்த கத்தியால் காதலனின் கழுத்தை அறுத்தார்.

இதையும் படியுங்கள்: ஆபீஸ் விஷயமா வந்த பெண்ணிடம் நல்லவன் போல பேசிய இளைஞன்.. ஓட்டலில் அறை எடுத்து கதற கதற வன்புணர்வு.

பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டி ஒரு பெரிய சூட்கேசில் அடைந்ததுடன் அந்த உடலை அங்கிருந்து அப்புறப்படுத்த முடிவு செய்தார், பின்னர் ஞாயிற்றுக்கிழமை இரவு காஜியாபாத் ரயில் நிலையத்தில் உடலை வீசுவதற்கு திட்டமிட்டார்,  டெல்லி எல்லையை ஒட்டியுள்ள துளசி நிகேதன் காலனி அருகே காசியாபாத்- வஜ்ராபாத் சாலையில் ட்ராலியல் உடலை  தள்ளி சென்றார், அப்போது அங்கிருந்த போலீசாருக்கு இந்த பெண் மீது சந்தேகம் ஏற்பட்டது. 

The girlfriend who killed the living together partner because he refused to marry her

அப்போது அங்கிருந்த போலீசார் அந்தப் பெண்ணை மரித்து சூட்கேசை ஆராய்ந்தனர். அப்போது அந்த சூட்கேசில் வெட்டப்பட்ட நிலையில் இளைஞரின் சடலம் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தியதில், அவர் நடந்தவற்றை கூறினார். நிலையில் அந்தப் பெண் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios