Asianet News TamilAsianet News Tamil

ஆபீஸ் விஷயமா வந்த பெண்ணிடம் நல்லவன் போல பேசிய இளைஞன்.. ஓட்டலில் அறை எடுத்து கதற கதற வன்புணர்வு.

உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் கொல்கத்தாவை சேர்ந்த  இளம்பெண்ணை ஓட்டலுக்கு அழைத்துச் சென்று இளைஞர் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

A young man took a young woman to a hotel and sexually abuse  her in Kolkata
Author
Uttar Pradesh, First Published Aug 9, 2022, 8:04 PM IST

உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் கொல்கத்தாவை சேர்ந்த  இளம்பெண்ணை ஓட்டலுக்கு அழைத்துச் சென்று இளைஞர் ஒருவர் பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தன்னை பாலியல் பலாத்காரம் செய்த நபர் தன்னிடம் நட்பாக பேசி மது குடிக்க வைத்து தனது கற்பை சூறையாடியதாக அந்த பெண் கூறியுள்ளார்.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இதை தடுக்க காவல் துறையும் அரசும் எத்தனை நடவடிக்கை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை, காதலிப்பது போல நடித்து கற்பழித்து ஏமாற்றுவது, காதலிக்க மறுக்கும் பெண்கள் முகத்தில் ஆசிட் வீசுவது, திருமணம் செய்துகொண்டு வரதடசணை கேட்டு கொடுமை செய்வது போன்ற  எண்ணற்ற கொடுமைகளைப் பெண்கள் அனுபவித்து வருகின்றனர். இந்த வரிசையில் வெளியூர் வந்த பெண் ஒருவரை நட்பாக பேசி இளைஞர் ஒருவர் நாசம் செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

A young man took a young woman to a hotel and sexually abuse  her in Kolkata

இதையும் படியுங்கள்: கணவனை பிரிந்து இளைஞனுடன் லிவிங் டுகெதர்...4 வரும் உல்லாசம்... காதலனை கொன்று சூட்கேசில் அடைத்த பெண்.

முழு விவரம் பின்வருமாறு:-  இளம்பெண் ஒருவர் கொல்கத்தாவில் தனியார் நிறுவனம் ஒன்றில் மார்க்கெட்டிங் எக்ஸிக்யூட்டிவ் அலுவலராக பணியாற்றி வருகிறார். அலுவலக பணி நிமித்தமாக  உத்தர பிரதேச மாநிலம் குருகிராமுக்கு வந்தார். அப்போது ஹோட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கியிருந்தார். அங்கு ஒரு இளைஞர் அந்தப் பெண்ணுடன் நட்பாக பேசினார், இருவரும் மத்திய உணவு சாப்பிட ஒன்றாக வெளியில் செல்லலாமா என இந்த இளைஞர் கேட்டார், அந்த நபர் நல்ல முறையில்  பேசியதால் அந்தப் பெண்ணும் அதற்கு சம்மதித்தார்.

இதையும் படியுங்கள்: சாமியாரிடம் குழந்தை வரம் கேட்ட பெண்.. சேட்டை செய்த சாமியார் மிர்ச்சி பாபா ! காவல்துறை கைது !

பின்னர் ஹோட்டலுக்கு சென்ற  இடத்தில் அந்தப் பெண்ணுக்கு அந்த இளைஞன் சிகரெட் வாங்கிக் கொடுத்தார், பின்னர் தனது காரில் அந்த இளைஞன் அந்த பெண்ணை அங்கிருந்து தங்கியுள்ள இடத்திலேயே ட்ராப் செய்துள்ளார். அதன் பிறகு இரவு விருந்துக்காக நொய்டாவில் உள்ள ஒரு ஓட்டலுக்கு போகலாம் என அந்தப் பெண்ணை அந்த இளைஞர் அழைத்தார். அந்த பெண்ணும் அதை நம்பி அங்கு சென்றார், பின்னர் அந்த பெண்ணை மது குடிக்க வைத்த அந்த இளைஞன் ஹோட்டல் அறையில் தள்ளி பாலியல் பலாத்காரம் செய்தார். அந்த இளைஞரிடமிருந்து தப்பிக்க அந்த பெண் முயன்றார் ஆனால் முடியவில்லை.

A young man took a young woman to a hotel and sexually abuse  her in Kolkata

பின்னர் டிஎல்எப் செக்டார் 2 காவல் நிலையத்தில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்த பெண் புகார் கொடுத்தார், செக்டார் 29 இல் உள்ள ஒரு கிளப்பிற்கு அழைத்துச் சென்ற இளைஞர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பின்னர்  தன்னை செக்டார் 49ல் இறக்கி விட்டதாகவும் அந்தப்பெண் கூறினார். அந்த புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் அந்த பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர்.

அதில் அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பாலியல் பலாத் காரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். பின்னர் பாலியல் குற்றவாளியை போலீசார் கிளப் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து தேடி வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios