Asianet News TamilAsianet News Tamil

வேலைக்கு போய் வருவதற்குள் 14 வயது மகள் மீது பாய்ந்த கள்ளக் காதலன்.. ஆண்குறியை அறுத்து எறிந்த காதலி.

காதலி இல்லாத போது அவரின் மகளை பாலியல் வன்புணர்வு செய்த காதலனின் ஆண் உறுப்பை கள்ளக்காதலி வெட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் இக்கொடூரம் அரங்கேறியுள்ளது.

 

The girlfriend cut off the penis of the fake boyfriend who sexually assaulted her 14-year-old daughter
Author
Uttar Pradesh, First Published Aug 24, 2022, 6:29 PM IST

காதலி இல்லாத போது அவரின் மகளை பாலியல் வன்புணர்வு செய்த காதலனின் ஆண் உறுப்பை கள்ளக்காதலி வெட்டியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் இக்கொடூரம் அரங்கேறியுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, அதை தடுக்க காவல்துறையும் அரசும் எத்தனையோ நடவடிக்கை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை,

The girlfriend cut off the penis of the fake boyfriend who sexually assaulted her 14-year-old daughter

குறிப்பாக காதலிக்க மறுக்கும் பெண்களின் முகத்தில் ஆசிட் வீசுவது, காதலித்து கற்பழித்து கர்ப்பமாகி கைவிடுவது, காதலித்து திருமணம் செய்து கொண்டு வரதட்சணை கேட்டு கொடுமை செய்வது போன்ற எண்ணற்ற கொடுமைகளை பெண்கள் அனுபவித்து வருகின்றனர். இதேபோல்  கள்ளக் காதல் வலையில் வீழ்த்தி பாலியல் ரீதியாகவும் பெண்கள் சுரண்டப்படுகின்றனர், இதுபோன்ற ஒரு சம்பவம் உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் அரங்கேறியுள்ளது.

இதையும் படியுங்கள்: சரக்கு போட்டுட்டு ஒருமையில் திட்டியதால் பைனான்ஸ் ஊழியரை கொன்றோம்... நண்பர்கள் கொடுத்த பகீர் வாக்குமூலம்.!

முழுவிவரம் பின்வருமாறு:- லக்கிம்பூர் கேரி மாவட்டத்திலுள்ள மஹிவகஞ்ச் பகுதியைச் சேர்ந்த 36 வயதான ஒரு பெண், தனது கணவரை பிரிந்து 2 ஆண்டுகளாக 32 வயதான காதலனுடன் வசித்து வருகிறார், கணவன் அடிக்கடி குடித்துவிட்டு வந்து தன்னை அடித்து துன்புறுத்தி வந்ததால் கணவனை  விட்டுப் பிரிந்து இளைஞனுடன் வாழ்ந்து வருகிறார், விவசாயக் கூலி வேலை செய்யும் அந்தப் பெண்ணுக்கு 14 வயதில் ஒரு மகள் உள்ளார், சமீபகாலமாக கள்ளக்காதலனும் அடிக்கடி குடித்து விட்டு வந்து பெண்ணை அடித்து கொடுமைபடுத்தி வந்துள்ளார்.

இதையும் படியுங்கள்: ப்ளீஸ் என்ன விட்டுடுங்க வலி தாங்க முடியல! கதறிய பெண்ணை விடாமல் கூட்டு பலாத்காரம்!சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது

கடந்த வாரம் புதன்கிழமை அந்தப் பெண் வேலைக்கு சென்றுவிட்டு  வீடு திரும்பியபோது அதிர்ச்சி சம்பவத்தை அவர் பார்த்தார், தனது 14 வயது மகளை கள்ளக் காதலன் பாலியல் பலாத்காரம் செய்த்தை அந்தப் பெண் நேருக்கு நேர் பார்த்தார், தனது மகளை காதலனிடம் இருந்து காப்பாற்ற முயன்றார், ஆனால் இதில் தலையீட்டால் கொன்றுவிடுவேன் என காதலன் அந்த பெண்ணை மிரட்டினார், ஆனால் அந்தப் பெண் விடவில்லை, காதலனிடம் இருந்து தப்பித்துச் சென்று சமயலறையில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை கொண்டு வந்து காதலனின் ஆணுறுப்பை வெட்டினார்.

The girlfriend cut off the penis of the fake boyfriend who sexually assaulted her 14-year-old daughter

அதில் கள்ளக்காதலன்  அலறி துடித்தார், அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கள்ளக்காதலனுக்கு  பாடம் புகட்டவே ஆண் உறுப்பை வெட்டியதாக அந்த பெண் கூறினார். இந்நிலையில் அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் காதலன் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். ஆனாலும் அந்நபரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் சிகிச்சைக்காக லக்னோவுக்கு மாற்றப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios