Asianet News TamilAsianet News Tamil

மகன் இறந்த துக்கத்தில் தாயும் தற்கொலை செய்த சம்பவம்.. சென்னையில் அடுத்தடுத்து அதிர்ச்சி !

தற்கொலை செய்துகொண்ட மகனின் பிரிவை தாங்கமுடியாத தாய் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Son commits suicide due to father scolding Mother also hangs herself in grief at chennai
Author
First Published Sep 6, 2022, 2:56 PM IST

சென்னை, வியாசர்பாடி கரிமேடு 2வது தெருவை சேர்ந்தவர் ரகுநாதன். இவர் ஆயிரம் விளக்கு பகுதியில் பிரின்டிங் பிரஸ் நடத்தி வருகிறார். இவருக்கு இளவரசி என்ற மனைவி இருக்கிறார். 21 வயதில் சுசில் என்ற மகனும் இருக்கிறார். மகன் சுசில் சேலைவாயில் பகுதியில் உள்ள நடனப்பள்ளியில் டான்ஸ் மாஸ்டராக இருக்கிறார்.

இந்நிலையில் தினமும் சுசில் இரவு நேரங்களில் வீட்டிற்கு மிகவும் தாமதமாக வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் தந்தை ரகுநாதன் கோபமடைந்து திட்டியுள்ளார். இதனால், தந்தைக்கும் மகனுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் நடந்து வந்ததுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு சுசில், வீட்டில் மின்விசிறியில் தூக்கு மாட்டிக் கொண்டார். 

Son commits suicide due to father scolding Mother also hangs herself in grief at chennai

மேலும் செய்திகளுக்கு..திராவிடியன் ஸ்டாக் என்ன தெரியுமா? பாரத மாதாவையும் வம்புக்கு இழுத்து மீண்டும் சர்ச்சையில் சிக்கிய எச்.ராஜா

நீண்டநேரமாக சுசில் அறையை விட்டு வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த அவரது தாய் மகன் அறைக்கு சென்று பார்த்தபோது அவர் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சுசிலை பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பரிசோதனை செய்த மருத்துவர்கள் சுசில் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் சிறிதுநேரத்தில் நான் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு உடனடியாக வீட்டிற்கு வந்துள்ளார்.அங்கு தனது மகன் அறைக்கு சென்று அதே மின்விசிறியில் அவரும் தூக்குமாட்டிக் கொண்டார். சிறிது நேரத்தில் அவரது வீட்டிற்கு வந்த உறவினர்கள் இளவரசியும் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.  

Son commits suicide due to father scolding Mother also hangs herself in grief at chennai

இளவரசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாயும், மகனும் அடுத்தடுத்து தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..கோவிலில் மருமகன் சபரீசனுடன் துர்கா ஸ்டாலின்.. பகுத்தறிவு இயக்கத்துக்கு சோதனையா? வச்சு செய்யும் நெட்டிசன்கள்

Follow Us:
Download App:
  • android
  • ios