Asianet News TamilAsianet News Tamil

காதலனை விஷம் கொடுத்து கொன்ற காதலி.. என்ன காரணம் தெரியுமா? வெளியான பரபரப்பு தகவல்..!

ஜூஸ் கொடுத்து காதலனை கொலை செய்துவிட்டு கல்லூரி மாணவி காவல் நிலையத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Sharon Raj murder case... accused greeshma statment
Author
First Published Oct 31, 2022, 12:40 PM IST

ஜூஸ் கொடுத்து காதலனை கொலை செய்துவிட்டு கல்லூரி மாணவி காவல் நிலையத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலை பகுதியை சேர்ந்தவர்  ஜெயராஜன். இவரது மகன் ஷாரோன் ராஜ் (23). இவர் குமரி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இறுதியாண்டு படித்து வந்துள்ளார். இவர் களியக்காவிளை அருகே  ராமவர்மன்சிறை பகுதியை சேர்ந்த கிரீஷ்மா (22) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.  இவர்களது காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்த இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதையும் படிங்க;- அந்த விஷயத்துக்கு மட்டும் ஒத்துக்க மாட்டேன்! பிடிவாதம் பிடித்த கள்ளக்காதலி! மனவேதனையில் வாலிபர் எடுத்த முடிவு

Sharon Raj murder case... accused greeshma statment

இதனையடுத்து, மகளை ஒரு வழியாக சம்மதிக்க வைத்து ராணுவ வீரருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில், பெண்ணின் பெற்றோர் வெளியெ சென்றதை அறிந்து கடந்த 14ம் தேதி ஷாரோன் தனது நண்பர் ரெஜினுடன் கிரீஷ்மாவின்  வீட்டுக்கு சென்றார். அப்போது, ரெஜினை வெளியே நிற்கவைத்துவிட்டு ஷாரோனை மட்டும் வீட்டுக்கு அழைத்து சென்று அவருக்கு ஜூஸ் கொடுத்துள்ளார். இதனை சிறிது நேரத்தில் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

Sharon Raj murder case... accused greeshma statment

உடனே அவர் பாறசாலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  ஆனால், சிகிச்சை பலனின்றி ஷாரோன்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில் விஷம் குடித்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

Sharon Raj murder case... accused greeshma statment

இதனிடையே, இளம்பெண் கொடுத்த ஜூஸ் குடித்ததால் தனது மகன் உயிரிழந்ததாக  தந்தை ஜெயராஜ் போலீசில் புகார் அளித்தார். இதுதொடர்பாக காதலி கிரீஷ்மாவிடம் விசாரணை நடத்திய போது ராணுவ வீரரை திருமணம் செய்து கொள்வதற்காக ஜூஸில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து ஷாரோனை கொன்றதாக  ஒப்புக்கொண்டார். ஜூஸ் கொடுத்து காதலனை கொலை செய்துவிட்டு கல்லூரி மாணவி காவல் நிலையத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க;-  திருமண ஆசைக்காட்டி 10ம் வகுப்பு மாணவியை சீரழித்த கொடூரன்.. ஓயாத டார்ச்சர் கொடுத்ததால் என்ன செய்தார் தெரியுமா?

Follow Us:
Download App:
  • android
  • ios