Asianet News TamilAsianet News Tamil

உன்னோட அம்மா கூட இருந்தது போதும்.. நீ தான் எனக்கு வேணும்.. பலான இடத்தில் கை வைத்து சில்மிஷம் செய்த ரவுடி.!

கடந்த 3 நாட்களுக்கு முன் நள்ளிரவில் சிறுமியை தமீம் அன்சாமி சரமாரியாக தாக்கி பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, இதற்கு உடன் படவில்லை என்றால், உன்னையும் உனது தாயையும் கொலை செய்து விடுவேன்' என்று தமீம் அன்சாரி மிரட்டியுள்ளார்.

sexual harassment in child baby....rowdy arrest in chennai police
Author
Chennai, First Published Apr 9, 2022, 8:29 AM IST

கள்ளக்காதலியின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் பிரபல ரவுடி போக்சோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கள்ளக்காதலி

சென்னை பெரம்பூர் மட்டுமா நகர் பகுதியை சேர்ந்தவர் 31 வயது மதிக்கத்த பெண். இவரது கணவர் உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். 17 வயதில் மகள் இருக்கிறார். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக கோயம்பேடு பகுதியில் அந்த பெண் வேலை பார்த்து வந்தார். அப்போது, தமீம் அன்சாரி (32) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து, பெரம்பூரில் உள்ள வீட்டில் தமீம் அன்சாரியுடன் ஒன்றாக அந்த பெண் வாழ்ந்து வந்தார்.

மகளுக்கு பாலியல் தொல்லை

இந்நிலையில், கடந்த 6 மாதங்களாக அந்த பெண்ணின் மகளுக்கு தமீம் அன்சாரி பலமுறை பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த சிறுமி தாயிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தாய் தமீம் அன்சாரியை கண்டித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன் நள்ளிரவில் சிறுமியை தமீம் அன்சாமி சரமாரியாக தாக்கி பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது, இதற்கு உடன் படவில்லை என்றால், உன்னையும் உனது தாயையும் கொலை செய்து விடுவேன்' என்று தமீம் அன்சாரி மிரட்டியுள்ளார்.

ரவுடி கைது

நீண்ட போராட்டத்துக்கு பின் தாயும் மகளும் வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் நேற்று மாலை, பெரவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தமீம் அன்சாரி குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இதில், அவர் பிரபல ரவுடியாக வலம் வந்தவர் என்பதும், ஏற்கனவே பல திருட்டு, அடிதடி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தமீம் அன்சாரியை பிடித்து காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்தனர். இதில், சுமதியின் மகளுக்கு பலமுறை பாலியல் தொல்லை கொடுத்து வந்தது உறுதியானது. இதையடுத்து, போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தமீம் அன்சாரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க;- ஓயாத டார்ச்சர்.. உடலுறவுக்கு மறுப்பு.. வெறியில் இருந்த கள்ளக்காதலன் ஆசிட்டை எடுத்து எங்கு ஊற்றினார் தெரியுமா?

Follow Us:
Download App:
  • android
  • ios