Asianet News TamilAsianet News Tamil

ஓயாத டார்ச்சர்.. உடலுறவுக்கு மறுப்பு.. வெறியில் இருந்த கள்ளக்காதலன் ஆசிட்டை எடுத்து எங்கு ஊற்றினார் தெரியுமா?

செல்வத்திற்கு திருமணமாகவில்லை. இருவரும் ஜோடியாக சேர்ந்து பல்வேறு ஊர்களுக்கு சென்று ஜவுளி வியாபாரம் செய்து வந்தனர். அப்போது இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி வெளியூர் செல்லும் போதெல்லாம் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதனையடுத்து, சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் 2 பேரும் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி ஜவுளி வியாபாரம் செய்து வந்தனர். 

Acid Attack to fake girlfriend face
Author
Tirunelveli, First Published Mar 28, 2022, 11:00 AM IST

உல்லாசத்திற்கு அழைத்த போது வராமல் திருமணத்திற்கு வலியுறுத்திய கள்ளக்காதலி மீது ஆசிட் வீசிய கள்ளகாதலனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

கள்ளக்காதல்

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்தவர் முத்துராமலட்சுமி (35). இவர் ஊர், ஊராக சென்று ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி, கணவரை பிரிந்து வாழ்ந்து தாயுடன் வசித்து வருகிறார். தேனி மாவட்டத்தில் முத்துராமலட்சுமி ஜவுளி வியாபாரம் செய்தபோது, மற்றொரு ஜவுளி வியாபாரியான செல்வம் (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

இதையும் படிங்க;- அண்ணியுடன் கட்டிலில் வெறி தீர கொழுந்தன் உல்லாசம்... நேரில் பார்த்த சிறுவர்களுக்கு நேர்ந்த கொடூரம்..!

Acid Attack to fake girlfriend face

தனி வீடு எடுத்து குடித்தனம்

செல்வத்திற்கு திருமணமாகவில்லை. இருவரும் ஜோடியாக சேர்ந்து பல்வேறு ஊர்களுக்கு சென்று ஜவுளி வியாபாரம் செய்து வந்தனர். அப்போது இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. அடிக்கடி வெளியூர் செல்லும் போதெல்லாம் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதனையடுத்து, சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் 2 பேரும் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி ஜவுளி வியாபாரம் செய்து வந்தனர். இந்நிலையில், முத்துராமலட்சுமி, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு செல்வத்திடம் அடிக்கடி வற்புறுத்தியுள்ளார். 

உல்லாசத்திற்கு மறுப்பு

ஆனால், ஏதோ சாக்கு போக்கு சொல்லி மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று முத்துலட்சுமியை செல்வம் உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். அதற்கு  தாலி கட்டாமல் உல்லாசமாக இருக்க முடியாது என்று அப்பெண் மறுக்கவே இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. 

Acid Attack to fake girlfriend face

ஆசிட் வீச்சு

இதனால், ஆத்திரமடைந்த செல்வம் முன்கூட்டியே வாங்கி வைத்திருந்த ஆசிட்டை எடுத்து முத்துலட்சுமி முகத்தில் ஊற்றி விட்டு தப்பித்து சென்றுள்ளார். இதனால், வலி தாங்க முடியாமல் அலறிதுடித்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக முத்துலட்சுமி கொடுத்த புகாரிடின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இதையும் படிங்க;-  எங்க அண்ணி டிரஸ்ஸே இல்லாம எவ்வளவு அழகாக இருக்கா பாரு... செல்போனில் ஆபாச படம் காட்டிய கணவர்... மனைவி எடுத்த விபரீத முடிவு..!

Follow Us:
Download App:
  • android
  • ios