நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே ஒரு கிராமத்தில் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பல்வேறு மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 

பள்ளிக்கு சென்ற மாணவியை கத்தி முனையில் பலாத்காரம் செய்த நபரை போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தீவிரமாக தேடிவருகின்றனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே ஒரு கிராமத்தில் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பல்வேறு மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பகுதிகளில் போக்குவரத்து வசதி இல்லாததால் மாணவ, மாணவியர் நடந்தும் சைக்கிளிலும் தான் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

இதையும் படிங்க;- நைட்டானாவே ஃபுல் மப்பிள் டார்ச்சர்.. அதுக்கு மறுத்த மனைவி.. அடம் பிடித்த கணவர்! மர்ம உறுப்பில் அடித்து கொலை.!

இந்நிலையில் நேற்று காலையில் வழக்கம் போல 8ம் வகுப்பு மாணவி பள்ளிக்கு தனியாக சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் திடீரென பள்ளி மாணவியிடம் கத்தியை காட்டி மிரட்டி ஆசைக்கு இணங்கும் படி கூறி மிரட்டியுள்ளார். இதனையடுத்து அந்த பள்ளி மாணவியை மிரட்டி வலுக்காட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

இதையும் படிங்க;- கணவரை மாடியில் வைத்துக்கொண்டே மனைவி உல்லாசம்.. நேரில் பார்த்த கணவர்.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?

இதனையடுத்து ஒருவழியாக தப்பித்து வந்த பள்ளி மாணவி நடந்த சம்பவம் தொடர்பாக பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.