பள்ளி மாணவியிடம் சில்மிஷம்… 53 வயதில் செய்யும் வேலையா இது?
மணப்பாறை அருகே 53 வயதுடைய நபர் பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மணப்பாறை அருகே 53 வயதுடைய நபர் பள்ளி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே செவல்பட்டியில் அரசு மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. அதன் அருகே பேருந்து நிறுத்தம் ஒன்று உள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்தில் காரைப்பட்டி அருகே உள்ள மஞ்சம்பட்டியை சேர்ந்த 53 வயதான வெற்றிவேல் என்பவர் பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் சாப்பாடு கேட்டதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: ஓயாத டார்ச்சர்! மரம் அறுக்கும் எந்திரத்தால் கை, கால், ஆணுறுப்பை துண்டு துண்டாக்கிய கள்ளக்காதலி! அதிர வைக்கும்
இதை அடுத்து மாணவி ஒருவர் அந்த நபருக்கு தனது டிபன் பாக்ஸில் இருந்த உணவை கொடுத்துள்ளார். சாப்பிட்டு விட்டு டிபன் பாக்ஸை திருப்பி கொடுத்த அந்த நபர், அதில் காதல் கடிதம் மற்றும் சாக்லேட்டுகளை வைத்து கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவி அவரிடம் உங்கள் பிள்ளைகளிடம் இப்படி தான் கொடுப்பீங்களா என்று ஆவேசமாக கேட்டுள்ளார். ஆனால் அதை பொருட்படுத்தாத அந்த நபர் மாணவியின் கையை பிடித்து இழுத்ததோடு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதையும் படிங்க: கதறிய 70 வயது பாட்டி.. விடாத பேரன்.. படுக்கபோட்டு என்ன செய்தார் தெரியுமா?
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி இந்த சம்பவம் குறித்து தனது பெற்றோர்களில் கூறியுள்ளார். இதை அடுத்து அந்த நபர் மீது மணப்பாறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் அவர் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்த மகளிர் போலீஸார் அவரை கைது செய்தனர். பள்ளி மாணவியிடம் 53 வயது நபர் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.