Asianet News TamilAsianet News Tamil

டாஸ்மாக் பாரில் வைத்து பிரபல ரவுடி சரமாரி வெட்டிக்கொலை.. அலறியடித்து ஓடிய குடிமகன்கள்..!

சென்னையை அடுத்த அம்பத்தூரில் டாஸ்மாக் பாரில் பிரபல ரவுடி சரமாரியாக வெட்டிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

rowdy murder
Author
Tamil Nadu, First Published Jul 7, 2019, 11:45 AM IST

சென்னையை அடுத்த அம்பத்தூரில் டாஸ்மாக் பாரில் பிரபல ரவுடி சரமாரியாக வெட்டிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை அம்பத்தூர் ரயில் நிலையம் அருகே திருவள்ளுவர் தெருவை சேர்ந்த ஹரிதாஸ்(42). இவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவர் மீது கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று இரவு வீட்டின் அருகே உள்ள டாஸ்மாக் பாரில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார்.  rowdy murder

அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த 5 பேரும் மறைத்து வைத்திருந்த அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களால் ஹரிதாஸை சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஹரிதாஸ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அங்கு மது அருந்திக்கொண்டிருந்தவர்கள் இதை கண்டு அலறியடித்து ஓட்டம்பிடித்தனர். இதையடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது.

 rowdy murder

அது குறித்துஉடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஹரிதாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாஸ்மாக் பாரில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஹரி கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமாக கொலை நடைபெற்றதா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ஹரி 2007-ம் ஆண்டில் அம்பத்தூரில் நடந்த ஒரு கொலை வழக்கில் தொடர்பு உடையவர் என்று கூறப்படுகிறது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மார்க்கெட் பகுதியில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios