கோவை மாவட்டம் வடவள்ளியை அடுத்த காளம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் வீட்டிற்கு வெளியே உள்ள குளியலறையில் குளித்து கொண்டு இருந்தார். அப்போது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது செல்போனில் அந்த இளம்பெண் குளிப்பதை வளைச்சு வளைச்சு வீடியோ எடுத்துள்ளார்.

கோவையில் இளம்பெண் குளிப்பதை வளைச்சு வளைச்சு வீடியோ எடுத்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் கைப்பற்றப்பட்ட செல்போனை ஆய்வு செய்து வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கோவை மாவட்டம் வடவள்ளியை அடுத்த காளம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் வீட்டிற்கு வெளியே உள்ள குளியலறையில் குளித்து கொண்டு இருந்தார். அப்போது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது செல்போனில் அந்த இளம்பெண் குளிப்பதை வளைச்சு வளைச்சு வீடியோ எடுத்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் அலறி கூச்சலிட்டுள்ளார். இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர்.

இதையும் படிங்க;- என்ன லவ் பண்ணிட்டு வேற ஒருத்தன கல்யாணம் பண்ணுவியா.. உல்லாசத்துக்கு மறுத்த காதலி.. கதறவிட்ட காதலன்..!

அப்போது அந்த குளியலறையின் அருகில் இருந்து வாலிபர் ஒருவர் தப்பியோடுவதையும் பார்த்தனர். உடனே பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த வாலிபரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், அவரது செல்போனையும் ஆய்வு செய்தனர். 

விசாரணையில் அந்த வாலிபர் காளம்பாளையத்தைச் சேர்ந்த ராஜேந்திரகுமார் (29) என்பதும், பிளம்பராக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரகுமாரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இதையும் படிங்க;- கல்யாணம் ஆகி 6 வருஷம் ஆச்சு! குழந்தையே இல்லை! ஆத்திரத்தில் மனைவியின் அந்தரங்க உறுப்பில் கணவர் செய்த கொடூரம்.!