Asianet News TamilAsianet News Tamil

பிஎஸ்பிபி பள்ளியில் ஆசிரியைகளையும் காம வேட்டையாடிய ராஜகோபால்... வெடிக்கும் பாலியல் விவகாரம்..!

ராஜகோபாலன் மற்றும் அவனுக்கு பின்னால் இருப்பவர்களை குறித்து, அறிய காவல் அதிகாரிகள் தீவிர வேட்கை நடத்தி வருகிறார்கள்.


 

Rajagopal sexually harassed teachers at BSPP school ... Explosive sex affair ..!
Author
Tamil Nadu, First Published Jun 4, 2021, 6:06 PM IST

ஆசிரியராக பணிபுரிந்த ராஜகோபாலன், சேஷாத்ரி பள்ளியில் ஆசிரியைகளிடமும் தவறாக நடந்துகொண்டாதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பத்ம சேஷாத்ரி பள்ளியில் வணிக ஆசிரியர் ராஜகோபாலன் மீது வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து கொண்டே போக, இப்பிரச்சனை தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதை தொடர்ந்து, கடந்த மே-24-ஆம் தேதி கைது செய்யப்பட்டான் இந்தக் கொடூரன். நீதிமன்ற காவலில் இருந்து வந்த ராஜகோபாலனை, காவல் துறையினர் தற்போது காவலில் எடுத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.Rajagopal sexually harassed teachers at BSPP school ... Explosive sex affair ..!

மாணவிகளுக்கு பாலியல் குறித்த மெசேஜ்களை அனுப்புவேன், அவர்கள் எதிர்த்து கேட்டால் சாரி மாற்றி அனுப்பிவிட்டேன் என்று மலுப்பி விடுவதாக கூறியுள்ளார். காவல் துறையினரின் விசாரணையில் தவறை ஒப்புக்கொண்ட ராஜகோபாலன், மேலும் பல முக்கிய தகவல்களை கூறியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், சேஷாத்ரி பள்ளியில் வேறு சில ஆசிரியர்களும் இப்படி இருப்பதாக சந்தேகமடைந்துள்ளனர். இதுபோல தவறு செய்த ஆசிரியர்கள் குறித்து தகவல்களை சேகரிக்கும் பணியில், காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.Rajagopal sexually harassed teachers at BSPP school ... Explosive sex affair ..!

இப்படி ஒருபுறம் பிரச்சனைகள் நடக்க, மற்றொரு புதிய பிரச்சனை வெடித்துள்ளது. சேஷாத்ரி பள்ளியில் ஆசிரியைகளிடமும் ராஜகோபாலன் தவறாக நடந்துள்ளானாம். அதுவும் குறிப்பாக பள்ளியில் புதிதாக சேர்ந்த ஆசிரியர்களிடம் பாலியல் ரீதியாக பேசி, தொந்தரவு செய்துள்ளான். இதுகுறித்து ஆசிரியைகள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் நிர்வாகம் இதுகுறித்து கண்டுகொள்ளவில்லை. ஆசிரியரிடம் இருந்து மன்னிப்பு கடிதத்தை மட்டுமே பெற்றுள்ளது. இந்த கடிதத்தை தேடும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர், இதேபோல் பாதிக்கப்பட்ட ஆசிரியைகளை தேடும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். ராஜகோபாலன் மற்றும் அவனுக்கு பின்னால் இருப்பவர்களை குறித்து, அறிய காவல் அதிகாரிகள் தீவிர வேட்கை நடத்தி வருகிறார்கள்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios