போலீஸ் வேலை வாங்கி தருவதாக கூறி இளம் பெண்ணுடன் போலீஸ் SI பல முறை உல்லாசம்.. காவல் நிலையத்தில் அசிங்கம்.
போலீசில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி இளம்பெண்ணை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பலமுறை உடலுறவில் ஈடுபட்டுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த பெண் போலீஸ் வேலையில் சேர்வதற்காக பயிற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில் காவல் நிலையத்தில் வைத்து சப் இன்ஸ்பெக்டர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
போலீசில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி இளம்பெண்ணை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பலமுறை உடலுறவில் ஈடுபட்டுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த பெண் போலீஸ் வேலையில் சேர்வதற்காக பயிற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில் காவல் நிலையத்தில் வைத்து சப் இன்ஸ்பெக்டர் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த ஒரு வார காலமாக ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் காவல்துறை அதிகாரிகளால் பெண்கள் பாலியல் மோசடிக்கு ஆளான சம்பவங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிச்சத்திற்கு வந்தவண்ணம் உள்ளன. கடந்த இரண்டு நாட்களில் இரண்டு போலீஸ் அதிகாரிகளின் காதல் ரகசியங்கள் வெளி வந்துள்ளன. அந்த வரிசையில் தற்போது மற்றொரு போலீஸ் அதிகாரியும் இடம் பெற்றுள்ளார். தெலுங்கானா மாநிலம் கொமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண் காவல் துறையில் சேர்வதற்கான தினந்தோறும் பயிற்சி எடுத்து வந்தார்.
இதையும் படியுங்கள்: இன்ஸ்டாகிராமில் காதல் லீலை..10ம் வகுப்பு மாணவியை வீடியோ எடுத்து கதற வைத்த வாலிபர்
அப்போது அந்தப் பெண்ணின் தொடர்பு போலீஸ் எஸ்.ஐக்கு ஏற்பட்டது. அந்தப் பெண்ணை எப்படியாவது அனுபவிக்க வேண்டும் என முடிவு செய்த அந்த எஸ்.ஐ செய் அந்தப் பெண்ணை காவல் நிலையத்திற்கு வரவழைத்து போலீஸ் வேலையில் சேருவதற்கான அனைத்து உதவிகளையும் செய்வதாக கூறியுள்ளார், மேலும் அதற்கான புத்தகங்களை வாங்கி தருவதாக தெரிவித்துள்ளதுடன், தன்செல் படி செய்தால் நிச்சயம் போலீஸ் வேலை கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார். பின்னர் அந்த பெண்ணை தனது பாலியல் இச்சைக்கு இணங்குமாறு வற்புறுத்தி வந்த அவர் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பலமுறை உடலுறவில் ஈடுபட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்: அட கொடுமையே... இளம்பெண்ணிடம் நிர்வாணமாக வீடியோ கால் பேசிய இளைஞன்... கதி என்ன ஆச்சு பாருங்க..
ஒரு கட்டத்தில் எஸ்.ஐயின் பாலியல் சித்திரவதை தாங்கமுடியாமல் தான் அனுபவித்து வரும் கொடுமை குறித்து அந்தப் பெண் தனது பறெறோரிடம் கூறினார் இதையடுத்து அவரது பெற்றோர்கள் அந்த போலீஸ் எஸ்ஐ மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். ஏற்கனவே அவர் மீது இது போன்ற புகார்கள் கூறப்பட்டு வந்த நிலையில் உளவுத்துறை அதிகாரிகள் சிறப்பு விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார் அந்தப் பெண்ணின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் எஸ்.ஐயிடம் துரைரீதியான விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கானா காவல்துறையில் கடந்த இரண்டு நாட்களில் 2 போலீஸ் அதிகாரிகள் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளனர். நேற்று முன்தினம் மாரேடப்பள்ளி சர்க்கல் இன்ஸ்பெக்டர் ஸ்ரீனிவாஸ் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கினார். நோற்று மல்காக்கிரி சி.சி.எஸ்.எஸ்.ஐ தராவத் விஜய்குமார் ஆகியோர் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி விசாரணையில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் மேலும் ஒரு எஸ்.ஐ பாலியல் புகாரில் சிக்கியிருப்பது அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.