புல் போதையில் அழகிரி பேரனை ரோட்டில் போட்டு சாத்திய ஐஏஎஸ் அதிகாரி.. ரோட்டில் நடந்த அசிங்கம். . வீடியோ உள்ளே
மதுபோதையில் கே எஸ் அழகிரியின் பேரன் மற்றும் உறவுக்காரப் பெண்ணை தாக்கிய இந்து சமய அறநிலைத்துறை கூடுதல் ஆணையர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மதுபோதையில் கே எஸ் அழகிரியின் பேரன் மற்றும் உறவுக்காரப் பெண்ணை தாக்கிய இந்து சமய அறநிலைத்துறை கூடுதல் ஆணையர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் அவரது கார் ஓட்டுநர் முத்துராஜா என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
விவரம் பின்வருமாறு:- சென்னை கேகே நகரைச் சேர்ந்தவர் சுபாஷ் (22) இவர் தனது தங்கை மற்றும் தாயுடன் அண்ணா நகரில் இருந்து அசோக் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் வந்த ஹோண்டா சிட்டி கார் ஒன்று சுபாசின் காரை முந்தி சென்றது, முன்னும் பின்னும் உரசிச் செல்லும் படி வந்ததால், சுபாசுக்கும் காரில் இருந்த பெண்ணுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இரண்டு கார்களும் ஓரங்கட்டி நிறுத்தப்பட்டன.
இதையும் படியுங்கள்: கணவரை கழற்றிவிட்ட உஷாவை உஷார் செய்த கள்ளக்காதலர்கள்! உல்லாசத்திற்கு போட்டா போட்டி! இறுதியில் நடந்த அதிர்ச்சி
காரில் இருந்த பெண் உடனே போனில் ஒருவருக்கு தகவல் கூறினார், சிறிது நேரத்தில் ஒரு நபர் மதுபோதையில் அங்கு வந்தார். அந்த நபர் சுபாஷ் மற்றும் அவரது தங்கை தாயை தகாத வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது, இதனால் சுபாஷ்க்கும் அந்த நபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது, அதில் மதுபோதையில் இருந்த அந்த நபர் சுபாஷை தாக்கியுள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட சுபாஷ் அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் தாக்கப்பட்ட சுபாஷ் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரியின் பேரன் என்பது தெரிந்தது.
இதையும் படியுங்கள்: சென்னையில் பிரபல கஞ்சா வியாபாரி சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை.. அலறி கூச்சலிட்டு ஓடிய பொதுமக்கள்.!
மது போதையில் இருந்த நபர் இந்து சமய அறநிலைத்துறை கூடுதல் ஆணையர் கண்ணன் ஐஏஎஸ் என்பது தெரிந்தது. காரில் சென்ற பெண் கண்ணன் ஐஏஎஸ்சின் உறவுக்காரப் பெண் என்பதும் விசாரணையில் தெரிந்தது. இதில் இரு தரப்பினரிடமும் போலீசார் விசாரணை நடத்தியதினர். அதற்கிடையில் கே.எஸ் அழகிரியின் பேரன் தாக்கப்பட்டார் என்று தகவல் பரவியதால் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் அசோக் நகர் காவல் நிலையத்தில் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் தனது பேரனை தாக்கிய ஐஏஎஸ் அதிகாரி கண்ணன் மீது வழக்கு பதிவு செய்ய கே.எஸ் அழகிரி கூடுதல் ஆணையரிடம் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் கண்ணன் ஐஏஎஸ் மதுபோதையில் இருந்தாரா என்பது குறித்து விசாரிக்க மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் விஜயலட்சுமியின் காரை ஓட்டிவந்த கண்ணனின் கார் ஓட்டுநர் முத்துமணி என்பவரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் ஐபிஎஸ் அதிகாரி கண்ணன் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர், விஜயலட்சுமி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் சாலையில் நின்றுக்கொண்டு சுபாஷ்ம், காரில் இருந்து அந்த பெண்ணும் மாற்றி மாற்றி வாய்தகராறு செய்வது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.