இது குறித்து தெரிவித்துள்ள முகேஷ், அந்த முதியவர் இவ்வளவு பெரிய குற்றம் செய்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை, அவர் செய்த காரியங்களை வீடியோ அடிப்படையில் புகார் கொடுத்துள்ளேன்.

பெண் நாயை வீட்டுக்குள் வைத்து அந்த நாயை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்த முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர். நாயுடன் முதியவர் உல்லாசம் அனுபவித்த போது நாயின் உரிமையாளர் எடுத்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எந்த இடத்திலும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாக தொடர்ந்து அபயக் குரல் எழுகிறது. ஆறு மாத குழந்தை முதல் 60 வயது மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் சம்பவங்கள் நாட்டில் அதிகரித்திருக்கிறது. இதை கட்டுப்படுத்த அரசும் காவல்துறையும் எத்தனையோ நடவடிக்கைகளை மேற்கொண்டும், குற்றங்கள் குறைந்தபாடில்லை. மொத்தத்தில் பெண்களின் பாதுகாப்பு முற்றிலும் கேள்விக்குறியாகி வரும் நிலையில், இப்போது பெண் விலங்குகளும் சில மனித மிருகங்களால் பாலியல் இச்சைக்கு ஆளாக்கப்படும் கொடூரங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையும் படியுங்கள்:  ஜாதிசங்க பனியன் போடு, அரிவாள் எடுத்து வெட்டு, அடிதடி பண்ணு.. துண்டிவிடும் அன்புமணி.. Ex மாவட்ட செயலாளர் பகீர்.

அரியானா மாநிலம் குருகிராமைச் சேர்ந்த 60 வயது முதியவர் நாயுடன் உடலுறவில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவில் குருகிராமில் உள்ள சோஹ்னா என்ற கிராமத்தில் சுரேஷ் என்ற 67 வயதான நபர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவி இல்லை, இவரின் பக்கத்துவீட்டில் முகேஷ் என்பவர் கடந்த சில வருடங்களாக பெண் மற்றும் ஆண் நாய்களை வளர்த்து வருகிறார். இந்நிலையில் அவர் வளர்த்து வந்த பெண் நாய் ஒன்று திடீரென காணாமல் போனது, முகேஷ் அந்த நாயை அக்கம் பக்கத்தில் தேடினார், எங்கு தேடியும் அதைக் காணவில்லை, அப்போது முதியவரின் வீட்டு இருந்து நாய் கத்துவதுபோல சத்தம் கேட்டது, அப்போது ஜன்னல் வழியாக முகேஷ் எட்டிப் பார்த்தார்.

இதையும் படியுங்கள்: இனி வள்ளலார் பிறந்த தினம் இப்படித்தான் அழைக்கப்படும்.. முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி சரவெடி அறிவிப்பு.

அங்கு நடந்துகொண்டிருந்த காட்சியை கண்டு முகேஷ் பயங்கர அதிர்ச்சி அடைந்தார், நாயின் மீது சாய்ந்திருந்த அந்த முதியவர் அதனுடன் உல்லாசம் அனுபவித்துக் கொண்டிருந்தார், பின்னர் என்னதான் நடக்கிறது என்று அருகில் சென்று முகேஷ், அந்த முதியவர் செய்யும் காரியத்தை தனது செல்போனில் வீடியோ எடுத்தார், முதியவரின் வக்கிர செயலால் ஆத்திரமடைந்த முகேஷ், உங்களுக்கு ஏதாவது புத்தி இருக்கிறதா? என்று முதியவரை சரமாரியாக திட்டியதுடன், ஆத்திரத்தில் அந்த முதியவரை தாக்க முயற்சித்தார், ஆனால் தனது கோபத்தை அடக்கிக்கொண்டு அவர் தனது நாயை அந்த நபரிடம் இருந்து மீட்டு அதை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பின்னர் அந்த நாய் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள முகேஷ், அந்த முதியவர் இவ்வளவு பெரிய குற்றம் செய்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை, அவர் செய்த காரியங்களை வீடியோ அடிப்படையில் புகார் கொடுத்துள்ளேன். 

அவரை கடுமையாக தண்டிக்க வேண்டும் எனக் கோரினார், இந்நிலையில் நாயை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அந்த முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இதே போன்ற ஒரு சம்பவம் தெலுங்கானாவில் உள்ள வனபர்த்தி நகருக்கு அருகிலுள்ள பண்டாரு நகரில் நடந்துள்ளது, இப்பகுதியில் வசித்து வரும் ஆஞ்சநேயா என்ற கூலித்தொழிலாளி, மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார், இந்நிலையில் நாகவரத்தைச் சேர்ந்த பால்ரெட்டி என்பவர் தனது வீட்டுக்கு அருகில் எருமைகளை வளர்த்து வருகிறார், அந்த எருமையிடம் சென்ற ஆஞ்சநேயா, ஒரு பெண் எருமையை வன்புணர்வு செய்தார், இந்த சம்பவத்தை பார்த்தவர்கள் எந்த நபரை பிடித்து எச்சரித்து அனுப்பியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.