Asianet News TamilAsianet News Tamil

கள்ளக்காதலியை கொளுத்திய கள்ளக்காதலன்… பிறகு நடந்த அதிர்ச்சி சம்பவம்… வேலூரில் பரபரப்பு!!

வேலூரில் கள்ளக்காதலன் கள்ளக்காதலியை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

person set fire to a counterfeiter in vellore
Author
First Published Sep 23, 2022, 10:30 PM IST

வேலூரில் கள்ளக்காதலன் கள்ளக்காதலியை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். 45 வயதான இவர், பாத்திரக்கடை வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ள நிலையில், வேலூர் மாநகர் கன்சால்பேட்டை காந்தி நகர் பகுதியை சேர்ந்த திலகவதி என்ற பெண்ணோடு தொடர்பு ஏற்பட்டு பின்பு அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் திலகவதியின் கணவர் கோபிநாத்திற்கு தெரிய வரவே திலகவதியை கண்டித்து ஒழுக்கமாக இருக்கும் படி அறிவுறுத்தி இருக்கிறார். இதை அடுத்து திலகவதியும் ரமேஷும் யாருக்கும் தெரியாமல் வேலூர் சேண்பாக்கம் முள்ளிபாளையம் பகுதியில் தனியாக வாடகை வீடு ஒன்றை எடுத்து தங்கி வந்துள்ளனர். திலகவதியின் கணவர் வேலைக்கு சென்ற பின்பு கள்ளக்காதல் ரமேஷ் எடுத்திருக்கும் வீட்டிற்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பிரேக்அப் செய்த காதலி.. சோசியல் மீடியாவில் காதலியின் ஆபாச வீடியோவை காதலன்.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி !

இதனிடையே திலகவதிக்கு ரமேஷுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கள்ளக்காதலியை தீர்த்துக்கட்ட முடிவு செய்த கள்ளக்காதலன் ரமேஷ், பாசமாக பேசுவதுபோல் பேசி திலகவதியை வழக்கம் போல் சந்திக்கும் வாடகை வீட்டிற்கு வரும்படி போனில் அழைத்து இருக்கிறார். அந்த வீட்டிற்கு வந்த திலகவதியிடம், ரமேஷ் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கள்ளக்காதலன் ரமேஷ் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து திலகவதி மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதை அடுத்து திலகவதி உடல் முழுவதும் தீ மல மல பரவவே துடிதுடித்த திலகவதி பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கள்ளக்காதலன் ரமேஷை கட்டிபிடித்து என்னோடு சேர்ந்து நீயும் எரிந்து போ என்று கூறியுள்ளார். இதனால் ரமேஷ் மீதும் தீ பரவியுள்ளது. இதை அடுத்து ரமேஷ் கூச்சலிட்டுக்கொண்டு வீட்டிலிருந்து அரை நிர்வாணத்தோடு அரை கிலோ மீட்டர் தொலைவிற்கு ஓடி சென்று வலி எரிச்சல் தாங்க முடியாமல் வேலூர் கோட்டை அகழியில் குதித்துள்ளார்.

இதையும் படிங்க: தினமும் லேடிஸ் ஹாஸ்டலுக்குள் நுழைந்து உல்லாசம்..?? கதவை உடைத்து உள்ளே சென்று அட்டூழியம்.. 3 பேர் கைது.

ரமேஷ் குதித்ததை பார்த்த அங்குள்ளவர்கள் இதுக்குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் அங்கு வந்த காவல்துறையினர், அகழிலிருந்து ரமேஷை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதை தொடர்ந்து உடல் முழுவதும் எரிந்த நிலையில் இருந்த திலகவதியையும் காவல்துறையினர் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடல் முழுவதும் எரிந்த நிலையில் திலகவதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுக்குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸார், இருவரிடமும் விசாரணை செய்து வருகின்றனர். கள்ளக்காதலன் கள்ளக்காதலியை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios