பாத்ரூமில் நின்று கொண்டு 54 வயது முதியவர் செய்த அசிங்கம்.. வீடியோ காலில் நிர்வாணமாக நின்ற இளம் பெண்.
நிர்வாணமாக 54 வயது முதியவருக்கு வீடியோ கால் செய்து ஒரு கும்பல் அவரிடம் பணம் பறித்து வந்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒரு கட்டத்தில் லட்சகணக்கில் அவர்கள் பணத்தை கேட்டதால் விரக்தி அடைந்த முதியவர் அது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
நிர்வாணமாக 54 வயது முதியவருக்கு வீடியோ கால் செய்து ஒரு கும்பல் அவரிடம் பணம் பறித்து வந்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒரு கட்டத்தில் லட்சகணக்கில் அவர்கள் பணத்தை கேட்டதால் விரக்தி அடைந்த முதியவர் அது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்நிலையில் போலீசார் அதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சி என்பது சமூக வளர்ச்சிக்கு அடிப்படையாக இருந்து வருகிறது. மறுபுறம் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பலர் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பெண்களை ஆபாசமாக சித்தரித்து பாலியல் தொல்லை கொடுப்பது, நிர்வாண வீடியோ கால் செய்து அதை வைத்து ஆண்களிடம் பணம் பறிப்பது, வங்கி கணக்கில் இருந்து பணத்தை கொள்ளையடிப்பது என எண்ணற்ற குற்றங்கள் அரங்கேறி வருகின்றன.
ஆனால் சமீப காலமாக நிர்வாண வீடியோ கால் மோசடி பரவலாக அதிகரித்து வருகிறது. ஆண்களுக்கு உண்டான சபலத்தை பயன்படுத்தி இந்த மோசடி அரங்கேற்றப்பட்டு வருகிறது. முழு விவரம் பின்வருமாறு:- மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் வசித்து வருபவர் 54 வயது முதியவர், இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர் மனைவியை இழந்தார், இந்நிலையில் அந்நபர் தனிமையில் இருந்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு பிரியங்க ஜெயின் என்ற இளம்பெண்ணின் பேஸ்புக்கில் இருந்து ரிக்வஸ்ட் வந்தது.
இதையும் படியுங்கள்: பாலியல் தேவைகளுக்கு அனுகவும்.. பக்கத்து வீட்டு ஆன்டி நம்பரை போஸ்புக்கில் பகிர்ந்த சாடிஸ்ட் இளைஞன்.
அதை அவர் ஏற்றுக் கொண்டார், இருவரும் பேஸ்புக்கில் சில நாட்கள் உரையாடி வந்தனர், அதன்பிறகு அந்தப் பெண் முதியவரிடம் ஆபாசமாக பேசத் தொடங்கினார். இது அவரின் ஆர்வத்தை தூண்டியது, ஒரு கட்டத்தில் அந்த இளம்பெண்ணின் குரலுக்கு அவர் அடிமையானார், அப்போது ஒரு நாள் அந்த இளம்பெண் இருவரும் நிர்வாணமாக வீடியோகாலில் பேசலாமா என கேட்டார், அதை ஒப்புக் கொண்ட அந்த முதியவர் பாத்ரூமில் சென்று அந்தப் பெண்ணுடன் நிர்வாணமாக வீடியோ காலில் பேசினார்.
இதையும் படியுங்கள்: ஆண்டிகளின் பின்புறத்தை தட்டி ரசித்த இளைஞர்.. இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்த போது வசமாக சிக்கி சின்னாபின்னம்..!
அன்று முதல் முதியவருக்கு தொல்லை ஆரம்பித்தது, நிர்வாணமாக வந்த பெண்ணின் பின்னணியில் இருந்த கும்பல் தனது வேலையை காட்ட ஆரம்பித்தது. அந்த முதியவரிடம் உடனே 30 ஆயிரம் ரூபாய் அனுப்பவேண்டும் இல்லை என்றால் இளம்பெண்ணுடன் நிர்வாணமாக பேசிய வீடியோவை சமூகவலைதளத்தில் வெளியிடுவோம் என மிரட்ட ஆரம்பித்தது.
அதற்கு அஞ்சிய அந்த நபர் 30 ஆயிரத்தை அனுப்பிவைத்தார், பின்னர் அந்தப் பெண்ணின் அழைப்புகளை அவர் புறக்கணித்து வந்தார், அதன்பின்னர் திடீரென சிபிஐ அதிகாரிகள் பேசுவதாக அழைப்பு வந்தது, இளம்பெண்ணுடன் தாங்கள் நிர்வாணமாக பேசிய வீடியோ பதிவு தங்களிடம் இருப்பதாகவும் அந்த இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்று முதியவரிடம் மிரட்டினர்.
அந்த முதியவர் அதை உண்மை என எண்ணி அஞ்சினார், அவர்கள் 5.28 லட்சம் ரூபாய் தர வேண்டும் எனக் கோரினர். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த முதியவர் பிரச்சனையில் சிக்கி இருப்பதை குறித்து தனது மகன்களிடம் கூறினார், பின்னர் அவரது மகன்கள் ஒரு நபரை மும்பை சைபர் கிரைம் போலீசில் அழைத்துச்சென்று புகார் கொடுத்தனர். இந்நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்