Asianet News TamilAsianet News Tamil

கர்ப்பிணி நாயை பலாத்காரம் செய்த காமக்கொடூரன்.. அக்கம் பக்கத்தினர் பார்த்ததால் என்ன செய்தார் தெரியுமா?

3வது மாடியில் இருந்து நாயின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் எட்டி பார்த்த போது அந்த வாலிபர் பால்கனியில் வைத்து நாயை பாலியல் பலாத்காரம் செய்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

Noida Man Rapes Pregnant Dog tvk
Author
First Published Oct 28, 2023, 3:01 PM IST

கர்ப்பிணி நாயை பாலியல் பலாத்காரம் செய்து 3வது மாடியில் இருந்து வாலிபர் தூக்கி வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அந்த கொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர். 

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தனியார் கட்டுமான நிறுவனத்தில் பணிபுரியும் சோன்வீர் (28). இவர் 3வது மாடியில் வசித்து வருகிறார். இந்நிலையில், 3வது மாடியில் இருந்து நாயின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் எட்டி பார்த்த போது அந்த வாலிபர் பால்கனியில் வைத்து நாயை பாலியல் பலாத்காரம் செய்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

இதையும் படிங்க;- அதிமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் மகனை கொலை செய்தது இதற்காக தான்! கைதானவர்கள் பகீர் வாக்குமூலம்.!

Noida Man Rapes Pregnant Dog tvk

உடனே இதனை கண்ட வாலிபர் நாயை 3வது மாடியில் இருந்து கீழே தூக்கி வீசியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று நாயை பார்த்த போது அது ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அக்கம் பக்கத்தினர் நாயை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இதனையடுத்து அந்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க;- எவ்வளவு சொல்லியும் கேட்காமல் மாமியாருடன் உல்லாசம்! கடுப்பான மருமகன்! ஜெயிலர் பட பணியில் செய்த தரமான சம்பவம்.!

Follow Us:
Download App:
  • android
  • ios