Asianet News TamilAsianet News Tamil

என் சம்பளம் அதிகமாயிடுச்சி, வரதட்சணையும் அதிகமா வாங்கிட்டு வா.! சாப்ட்வேர் என்ஜினியர் மனைவிக்கு டார்ச்சர்

தனது சம்பளம் அதிகமானதால் மனைவியை அதிக வரதட்சணை வாங்கி வரும்படி  சாப்ட்வேர் இன்ஜினியர் மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

My salary has increased and my dowry has increased.  software engineer Torture to wife
Author
First Published Oct 19, 2022, 6:17 PM IST

தனது சம்பளம் அதிகமானதால் மனைவியை அதிக வரதட்சணை வாங்கி வரும்படி  சாப்ட்வேர் இன்ஜினியர் மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கணவனின் தொல்லை தாங்க முடியாமல் அந்த பெண் கணவன் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இது கொடுமை ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ளது.

சாப்ட்வேர் வேலை மோகம் என்பது இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. வேலைக்கு சேரும்போது குறைந்த அளவில் சம்பளம் என்றாலும், அனுபவம் அதிகமாக அதிகமாக, அவர்களின் ஊதியமும் பன்மடங்கு உயர்வது வழக்கம்.  எனவே சாப்ட்வேர் வேலையை குறிவைத்த சாதாரண டிகிரி படித்தவர்கள் கூட குறுகியகால சர்டிபிகேட் கோர்ஸ்களை படித்து சாப்ட்வேர் துறைக்குள் நுழைகின்றனர்.

My salary has increased and my dowry has increased.  software engineer Torture to wife

இதுபோல ஒரு  இளைஞர் சாப்ட்வேர் வேலையில் சேர்ந்தார். அதை காட்டி திருமணமும் செய்து கொண்டார், திருமணமான ஒரு சில ஆண்டுகளில் அவருக்கு சம்பளம் பன்மடங்கு உயர்ந்தது.  இதனால்  மனைவியை அதிக வரதட்சணை வாங்கி வரும்படி டார்ச்சர் கொடுக்க தொடங்கியுள்ளார். இச்சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

இதையும் படியுங்கள்:  போலீஸ் இன்பார்மர் என நினைத்து பிரபல ரவுடி சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை.. 10 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

முழு விவரம் பின்வருமாறு:- ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் தற்போது கோனசீமா மாவட்டம் மண்ட பேட்டை மண்டலம், துவாரபுடி  கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி சைலஜா,  கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நமலா ஷ்யாம்  என்ற மென்பொறியாளரை திருமணம் செய்து கொண்டார். அப்போது வரதட்சணையாக சைலஜா குடும்பத்தினர்  ஒரு ஏக்கர் நிலம், ஒரு கிலோ தங்கம் கொடுத்தனர்.

My salary has increased and my dowry has increased.  software engineer Torture to wife

திருமணம் நடந்த சில மாதங்கள் மகிழ்ச்சியாக இருந்தனர்.  இந்த இரண்டு வருடத்தில்   ஷ்யாமின் சம்பளம் பன் மடங்காக உயர்ந்தது.  சம்பளம் அதிகரித்ததால் மனைவி சைலஜாவை அதிக வரதட்சணை வாங்கி வரும்படி ஷ்யாம் தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். அடிக்கடி மனைவியை அடித்து துன்புறுத்தினார். இதனாம் மனமுடைந்த மனைவி ஷைலஜா  தாய் வீட்டுக்கு சென்றார். அங்கு கணவன் வீட்டில் தனக்கு நேர்த கொடுமை குறித்து அவர் கூறவில்லை. மாறாக அங்கே வீட்டிற்கு வெளியே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அக்கம்பக்கத்தினர் வந்து அவரை சமாதானம் செய்தனர்.

இதையும் படியுங்கள்: மனைவியை ஓட்டலுக்கு அழைத்துச் சென்று ஜோடி மாறி உடலுறவு செய்ய சொல்லி டார்ச்சர்.. சைகோ கணவர் மீது புகார்.

அதன் பின்னர் அவர் கணவன் மற்றும் வரதட்சணை கொடுமை செய்த மாமனார் உள்ளிட்டோர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்நிலையில் இது குறித்து தெரிவித்தார் சைலஜாவின் மாமனார் நமல ரங்காரஜ்ஜிடம் விசாரித்ததில் மருமகள் சைலஜா பெற்றோர் குறைந்த அளவில்தான் வரதட்சனை கொடுத்ததாக தெரிவித்துள்ளார் இந்நிலையில் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios