19 வயது பெண்ணை முத்தமிட முயன்ற நபருக்கு மும்பை நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.

19 வயது பெண் ஒருவரை முத்தமிட முயன்ற நபருக்கு நீதிமன்றம் அதிரடியான தண்டனையை பிறப்பித்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி மதியம் 1 மணியளவில், பாதிக்கப்பட்ட பெண் மும்பையில் உள்ள விலே பார்லேயில் இருந்து பாந்த்ராவிற்கு தனது கல்லூரிக்கு சென்று கொண்டிருந்த போது இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அந்த பெண் கர் ரயில் நிலையத்தில் இறங்கினாள். தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் போது வேறொரு ரயிலுக்காக அந்த பெண் காத்திருந்தார்.

அப்போது பின்னால் வந்த ஒருவன் அப்பெண்ணை முத்தமிட முயன்றான். உடனே அந்த பெண் கத்த, சக பயணிகள் அவரை பிடித்து அடிக்க தொடங்கினர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், புகார் அளிக்க பாந்த்ரா காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 354ன் கீழ் (பெண்கள் மீது கிரிமினல் சக்தியை மூர்க்கத்தனமான நாகரீகத்தை ஏற்படுத்தும் நோக்கில் தாக்குதல் நடத்தியது) அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் பி.கே. கவண்டே தனது தீர்ப்பில் கூறியதாவது, தகவலறிந்தவரின் சாட்சியங்கள், குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு நோக்கத்துடனும், அறிவுடனும் குற்றவியல் சக்தியைப் பயன்படுத்தியதாகத் தெளிவாகக் காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

மூன்று மாதங்களுக்குள் முடிவடைந்த விசாரணையில், ஜூன் மாதம் கர் ரயில் நிலைய நடைமேடையில் 19 வயது மாணவியை வலுக்கட்டாயமாக முத்தமிட முயன்ற 25 வயது இளைஞருக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்து உள்ளார்.

இதையும் படிங்க..கண்ணீரில் தொண்டர்கள்!.. திமுக முக்கியப்புள்ளி மறைவு - அதிர்ச்சியில் முதல்வர் மு.க ஸ்டாலின் !!

இதையும் படிங்க..மதுரை டூ ஈஷா: 2 திமுக அமைச்சர்கள் மிஸ்ஸிங் - அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்ட பின்னணி இதுதானா.!