திருமணம் ஆகி நாலு மாசம் தான் ஆகுது! அதுக்குள்ள காதல் மனைவி கொலை! காட்டி கொடுத்த சிசிடிவி.. சென்னையில் பயங்கரம்
கடந்த ஜூன் 25ம் தேதி தாய் பேசியபோது தமிழ்ச்செல்வியின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. பலமுறை தொடர்புகொண்டபோது போனை எடுக்காததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
காதல் மனைவியை குத்திக்கொலை செய்த கணவரிடம் விசாரணை நடத்தப்பட்டுவந்த நிலையில், தற்போது அழுகிய நிலையில் இளம் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகர் 8வது தெருவை சேர்ந்தவர் மதன் (19). இவர் ஆட்டோ டிரைவர். புழல் அடுத்த கதிர்வேடு ஜான்விக்டர் தெருவை சேர்ந்த மாணிக்கம் - பல்கிஸ் தம்பதியின் மகள் தமிழ்ச்செல்வி (19) என்பவரை மதன் காதலித்து வந்தார். இவர்கள் காதல் விஷயம் பெற்றோர்களுக்கு தெரியவந்தது. இதனையடுத்து, பெற்றோர் சம்மதத்துடன் 4 மாதங்களுக்கு முன்புதான் இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர். பின்னர், இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.
இதையும் படிங்க;- வெளிநாடு சென்ற கணவன்! சைடு கேப்பில் மகளை கள்ளக்காதலனுக்கு விருந்தாக்க முயன்ற கொடூர தாய்! வெளியான பகீர் சம்பவம்
இந்நிலையில், கடந்த ஜூன் 25ம் தேதி தாய் பேசியபோது தமிழ்ச்செல்வியின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. பலமுறை தொடர்புகொண்டபோது போனை எடுக்காததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் உள்ள கோனே அருவிக்கு மதனும் தமிழ்ச்செல்வியும் குளிக்க சென்றிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு வனத்துறையினர் வைத்துள்ள கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது தமிழ்ச்செல்வியும் மதனும் ஒன்றாக செல்வதும் பிறகு மதன் மட்டும் தனியாக வருவதும் பதிவாகி இருந்தது.
இதையடுத்து போலீசார் தீவிரமாக விசாரித்து மதனை பிடித்தனர். அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரித்தபோது கோனே அருவியில் குளித்தபோது இரண்டு பேருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது தமிழ்ச்செல்வியை கத்தியால் குத்திவிட்டு மதன் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார் என்று தெரிந்தது. மதனிடம் செங்குன்றம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திவந்த போதும் தமிழ்ச்செல்வியை பற்றி எந்த தகவலையும் தெரிவிக்காமல் மாற்றி, மாற்றி பேசியுள்ளார். இது போலீசாருக்கு மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்திவந்தது.
இதையும் படிங்க;- டியூஷன் வந்த மாணவியுடன் கள்ளக்காதல்.. எவ்வளவு சொல்லியும் கேட்காத கணவர் உல்லாசம்..!
உடனடியாக மதனை அழைத்துக் கொண்டு கோனே நீர்வீழ்ச்சி பகுதிக்கு விரைந்து போலீசார் சம்பவ இடத்தில் பார்வையிட்டனர். இதனையடுத்து, நீண்ட தேடுதல் வேட்டைக்கு பிறகு அப்பகுதி கிராம மக்கள் உதவியுடன் தமிழ்ச்செல்வி உடல் அழுகிய நிலையில் எலும்புகூடாக கிடந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புத்தூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுசம்பந்தமாக மதனிடம் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர். தமிழ்ச்செல்வியின் சடலம் கிடைத்துள்ளதால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க;- புகார் கொடுக்க வந்த பெண்ணை கரெக்ட் செய்து புரட்டி எடுத்த இன்ஸ்பெக்டர்.. பணத்தையும் ஆட்டையை போட்டதால் ஆப்பு