அந்த ஆன்ட்டி மேல எப்போதும் எனக்கு மோகம்! மேக்கப்ல பார்த்ததுமே பேஜாராயி இப்படி பண்ணிட்ட! இளைஞர் பகீர் தகவல்..!
பக்கத்து வீட்டில் வசித்த பெண் மீது எப்போதும் ஒரு எனக்கு மோகம் உண்டு. எப்படியாவது ஒரு தடையாவது அவளை அடைந்து விட வேண்டும் ஆசை இருந்து வந்தது. சம்பவத்தன்று அந்த பெண் உறவினர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அலங்காரம் செய்து சென்றார். இதனை பார்த்ததும் எனக்கு அவர் மீது மேலும் ஆசை ஏற்பட்டது.
வீட்டில் பெண் சுயநினைவின்றி கிடந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக பக்கத்து வீட்டுக்காரர் கைது செய்யப்பட்டு போலீசில் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், கொக்கவிளை பகுதியைச் சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் வீட்டில் ரத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்த போது மனைவி சுயநினைவு இன்றி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே குடும்பத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. ஆனால், இன்னும் சுயநினைவு திரும்பவில்லை.
இதையும் படிங்க;- கள்ளக்காதலுக்கு இடையூறு.. ஸ்கெட்ச் போட்டு கணவரை போட்டு தள்ளிய மனைவி.. வாண்டடா வந்து சிக்கி பலியான நண்பன்..!
இந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சந்தேகத்தின் பேரில் அக்கத்து வீட்டை சேர்ந்த எட்வின்(30) என்பவரிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். போலீசார் பாணியில் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது.
எட்வின் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில்:- பக்கத்து வீட்டில் வசித்த பெண் மீது எப்போதும் ஒரு எனக்கு மோகம் உண்டு. எப்படியாவது ஒரு தடையாவது அவளை அடைந்து விட வேண்டும் ஆசை இருந்து வந்தது. சம்பவத்தன்று அந்த பெண் உறவினர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அலங்காரம் செய்து சென்றார். இதனை பார்த்ததும் எனக்கு அவர் மீது மேலும் ஆசை ஏற்பட்டது.
இதையும் படிங்க;- அம்மா சார் என்ன கொடைக்கானலுக்கு கூப்பிட்டு போயி ரூம்ல வச்சு இப்படி பண்ணிட்டாரு.. கதறிய மாணவி.. போக்சோவில் கைது
அதன்பிறகு நான் மது அருந்தினேன். அந்தநேரத்தில் நிகழ்ச்சி முடிந்து அந்த பெண் மட்டும் வீடு திரும்பினார். வீட்டில் தனியாக இருப்பதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி நானும் வீட்டுக்குள் புகுந்தேன். பின்னர் அவரை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது கட்டிலில் அவரது தலையை மோதியதில் படுகாயமடைந்து மயங்கினார். பின்னர் நான் வீட்டில் இருந்து வெளியேறி விட்டேன். அவரது கணவர் வந்ததும், உதவுவது போல் நடித்தேன். போலீசாரிமும் நகைக்காக நடந்திருக்கலாம் என தெரிவித்தேன். கடைசியில் சிக்கிக்கொண்டேன் என தெரிவித்துள்ளார்.