Asianet News TamilAsianet News Tamil

காதலுக்கு இடையூறு; தந்தையை தீர்த்துக்கட்ட நகை, பணத்தை வழங்கிய 16 வயது சிறுமி காதலனுடன் கைது

தேனி மாவட்டத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த தந்தையை காதலனுடன் சேர்ந்து கொலை செய்ய திட்டம் தீட்டிய 16 வயது சிறுமி உள்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

including 16 year old minor and 4 persons arrested who attempt murder her father for love issue in theni district vel
Author
First Published Aug 29, 2023, 7:38 PM IST

தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி ஆஞ்சநேயர் நகரில் வசித்து வருபவர் வேணுகோபால் பாண்டியன். இவரது மனைவி உமா மகேஸ்வரி. இந்த தம்பதிக்கு 16 வயதில் ரோஷிதா என்ற ஒரு மகளும், 8 வயதில் மகனும் உள்ளனர். வேணுகோபால் பாண்டியன் பழனிசெட்டிபட்டியில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் இரவு  வாசவி காலனியில் இருந்து ஆஞ்சநேயர் நகர் செல்லும் பாதையில் வேணுகோபால் பாண்டியன் தலையில் பலத்த காயங்களுடன் நடுரோட்டில் விழுந்து கிடந்துள்ளார்.

அருகில் இவரது ஸ்கூட்டரும் கிடந்ததால், ஸ்கூட்டரில் செல்லும்போது தவறி விழுந்து தலையில் அடிபட்டதாக கருதி அப்பகுதியில் உள்ளவர்கள் 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் அளித்தனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்ட அவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட போது, அவரது தலையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சரமாரியாக வெட்டு காயங்கள் இருந்தது தெரிய வந்தது.

தேனியில் மனைவி தூக்கிட்டுக்கொண்ட அதே கயிற்றில் கணவனும் தூக்கிட்டு தற்கொலை; கலங்கி நிற்கும் மகள்

உதவியாக இருந்த சிசிடிவி

மேலும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால் உடனடியாக அவரை மதுரையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினருக்கும் தகவல் அளித்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் இதுகுறித்து விசாரிக்கத் தொடங்கினர். அப்போது அப்பகுதியில் இருந்த வணிக நிறுவனத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது வேணுகோபால் பாண்டியன் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது மற்றொரு இரு சக்கர வாகனத்தில் ஒரு சிலர் அவரை பின்தொடர்வது தெரிய வந்தது. 

வெளிச்சத்திற்கு வந்த காதல்

மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே கேட்பாரற்று ஒரு இருசக்கர வாகனமும் கிடந்துள்ளது. அந்த வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து காவல் துறையினர் விசாரணையை தொடங்கினர். காவல்துறையினரின் விசாரணையில் வேணுகோபால் பாண்டியனின் மகளான ரோஷிதா பெரியகுளத்தைச் சேர்ந்த முத்துகாமாட்சி என்ற வாழவந்தானை(24) காதலிக்கும் விவகாரம் தெரிய வந்தது.

திருவாரூரில் ஒருதலை காதலுக்கு இடையூறாக இருந்த ஜமாத் செயலாளர் படுகொலை

சிக்கிய குற்றவாளிகள்

வாழவந்தானை பிடித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அவரும் அவரது நண்பர்களான பெரியகுளத்தைச் சேர்ந்த செல்வகுமார்(23) மற்றும் கண்ணப்பன் (22) ஆகியோர் திட்டமிட்டு வேணுகோபால் பாண்டியனை இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே தள்ளி அரிவாளால் வெட்டியதை ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. வேணுகோபால் பாண்டியனின் மகளான ரோஷிதா கடந்த ஆண்டு தேனியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்த நிலையில், காதல் விவகாரம் காரணமாக அவரை வேணுகோபால் பாண்டியன் சரமாரியாக தாக்கியுள்ளார்.

காதல் மலர்ந்தது

இதன் பின்னர் ரோஷிதாவிற்கும், வாழவந்தானுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தெரிந்த வேணுகோபால் பாண்டியனும், உமாமகேஸ்வரியும் வாழவந்தானை நேரில் சந்தித்து கடுமையாக எச்சரித்துள்ளனர். இருந்த போதும் ரோஷிதாவும், வாழவந்தானும் மிகவும் நெருங்கி பழகியுள்ளனர். மேலும் அடிக்கடி வெளியூர்களுக்கு சென்று தங்கியதாகவும் கூறப்படுகிறது.

வருங்கால மாமனாருக்கு ஸ்கெட்ச் போட்ட வாலிபர்; கச்சிதமாக முடித்த மனைவி, மகள்கள்

தந்தையை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டிய மகள்

இந்நிலையில் கடந்த வாரம் வாழவந்தானும், ரோஷிதாவும் இணைந்து காதலுக்கு இடையூறாக உள்ள தந்தை வேணுகோபால் பாண்டியனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி கடந்த வாரம் வேணுகோபால் பாண்டியன் வாசவி காலனி வழியாக தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நிலையில், இருசக்கர வாகனத்தில் தயாராக காத்திருந்த வாழ வந்தான், இரு சக்கர வாகனத்தில் வேகமாகச் சென்று அவரை இடித்து தள்ள முயன்றுள்ளான். 

அப்போது அதிர்ஷ்டவசமாக தப்பிய அவர் வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில் இரண்டாவது முறையாக அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு தனக்கு "ஷாக்ஸ்"வாங்கி வருமாறு தந்தையை கடைக்கு அனுப்பி வைத்தார் ரோஷிதா. தனது தந்தை கடைக்கு செல்வது மற்றும் திரும்ப வருவது குறித்த தகவல்களை தனது காதலனான வாழவந்தானுக்கு செல்போன் போன் மூலமாக தகவல் அளித்த வண்ணம் இருந்துள்ளார்.

சரமாரி தாக்குதல்

அப்போது ஒரு இருசக்கர வாகனத்தில் தனது இரண்டு நண்பர்களுடன் தயாராக காத்திருந்த வாழவந்தான் வேணுகோபால் பாண்டியனை பின் தொடர்ந்து வந்து, ஆள்அரவமற்ற இருட்டான பகுதிக்கு வந்தவுடன் அவரை இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே தள்ளிவிட்டு தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். வெட்டி முடித்ததும் மூவரும் அங்கிருந்து தப்பித்துச் சென்றனர். 

அதிர்ந்துபோன போலீஸ்

சம்பவ இடத்தில் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் ரோஷிதாவுக்கு போன் மூலமாக தொடர்ந்து தெரிவித்து வந்ததாக கைது செய்யப்பட்ட நபர்கள் கூறியதைக் கேட்டு காவல் துறையினர் அதிர்ந்து போயினர். மேலும் தனது தந்தையை கொலை செய்வதற்காக வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை எடுத்து ரோஷிதா காதலனிடம் கொடுத்ததாகக் கூறப்படும் விவரமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிடிபட்டவர்களின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து ரோஷிதாவும் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் கொண்டுவரப்பட்டார். இரண்டாவது குற்றவாளியான ரோஷிதா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வேணுகோபால் பாண்டியன் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios