Asianet News TamilAsianet News Tamil

தூத்துக்குடியில் வருங்கால மாமனாருக்கு ஸ்கெட்ச் போட்ட வாலிபர்; கச்சிதமாக முடித்த மனைவி, மகள்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் குடித்துவிட்டு ரகளை செய்துவந்த நபரை மனைவி, மகள்கள், மகளின் காதலன் சேர்ந்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

drunk man killed by wife and daughters and neighbors in thoothukudi district vel
Author
First Published Aug 29, 2023, 12:23 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தலையால் நடந்தான்குளம் கிராமம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் காளிமுத்து. ஓய்வு பெற்ற காவல் அதிகாரி. இவரது மகன் செல்வக்குமார் (வயது 43) கட்டிடதொழிலாளி. இவரது மனைவி பாக்கிய லட்சுமி. இவர்களுக்கு கார்த்திகா (21), சுதர்ஷினி (19) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். கார்த்திகா நெல்லையில் உள்ள தனியார் பொறியில் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். சுதர்ஷினி 12ம் வகுப்பு படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். 

மர்ம மரணம்

இந்நிலையில் நேற்று முன் தினம் (சனிக்கிழமை) வீட்டின் மாடியில் செல்வக்குமார் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து செல்வக்குமார் உடலை, அவரது குடும்பத்தினர் அடக்கம் செய்ய முயன்றுள்ளனர். ஆனால் அவரது உடலில் காயங்கள் இருந்ததால் அக்கம் பக்கத்தினர் கயத்தாறு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

திருவாரூரில் ஒருதலை காதலுக்கு இடையூறாக இருந்த ஜமாத் செயலாளர் படுகொலை

இதையெடுத்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சந்தேகத்தின் அடிப்படையில் செல்வக்குமாரின் மனைவி பாக்கியலட்சுமி, மகள்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். முதலில் 3 பேரும் முன்னுக்குபின்னாக தகவல் கூறியுள்ளனர். மேலும் செல்வக்குமார் உடற்கூறாய்வில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டு இருக்க வாய்ப்பு இருப்பதாகவும், அதற்கான அறிகுறிகள் இருப்பதாக தெரியவந்தை தொடர்ந்து காவல் துறையினர் அதிரடி விசாரணையில் ஈடுபட்டனர்.

கொலை செய்தது அம்பலம்

விசாரணையில் செல்வக்குமாரின் மனைவி பாக்கியலட்சுமி, அவரது இரு மகள்கள் கார்த்திகா, சுதர்ஷினி, இவர்களுடன் கார்த்திகாவை காதலித்து வரும் அதே ஊரைச் சேர்ந்த கந்தவேல் ஆகியோர் தலையணை மற்றும் துண்டால் இறுக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதையெடுத்து காவல் துறையினர் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் காவல் துறையினரிடம் பாக்கியலட்சுமி கூறுகையில், கடுமையான மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்த எனது கணவர் பல வருடங்களாக தினமும் குடித்துவிட்டு என்னையும், எனது மகள்களையும் மிகவும் ஆபாசமாக பேசி வந்தார். 

எங்கள் மருத்துவமனையை குறைசொல்வதா? கேரளா மருத்துவமனைக்கு எதிராக அமைச்சர் ஆவேசம்

அவரை கொலை செய்துவிடலாம் என கந்தவேல் ஆலோசனை தெரிவித்தார். அதன்படி அவர் திட்டம் தீட்டி எனது மகளின் செல்போனுக்கு அனுப்பினார். அதன்படி கடந்த சனிக்கிழமை இரவு 10 மணிக்கு எனது கணவர் கடையில் உணவு வாங்கி விட்டு வந்து மொட்டை மாடிக்கு சென்றுவிட்டார். நானும், எனது மகள்களும் கந்தவேலுடன் எங்கள் வீட்டினுள் காத்திருந்தோம். அவர் உறங்கியவுடன் ஏற்கனவே தயாராக வைத்திருந்த தலையணை மற்றும் துண்டுடன் நாங்கள் நான்கு பேரும் மொட்டை மாடிக்கு சென்றோம். 

ஸ்கெட்ச் போட்ட வாலிபர்

கந்தவேல் எங்களிடம் ஏற்கனவே கூறியிருந்தபடி நான் தலையணையால் எனது கணவரின் முகத்தை அழுத்த கந்தவேல் அவரது கைகளால் என் கணவரின் இடதுகை மற்றும் கால்களால் விலாவில் அழுத்தி பிடித்துக் கொண்டார். மூத்த மகள் கார்த்திகா அதே போன்று வலது கை மற்றும் வலது விலாவை அழுத்திக் கொண்டார். இளைய மகள் சுதர்ஷினி எனது கணவரின் இரண்டு கால்களிலும் ஏறி உட்கார்ந்து கால்களை அழுத்தி பிடித்துக்கொண்டார். ஆனாலும் எனது கணவர் திமிறி என்னை கொலை செய்கிறார்கள் என்று கத்தவே நான் கொண்டு வந்த துண்டால் அவரது வாயில் திணித்து அடைத்தேன். சிறிது நேரத்தில் எனது கணவர் மூச்சுப் பேச்சின்றி இறந்தார். 

கள்ளக்காதல் விவகாரத்தில் மோதலை தடுக்கச்சென்ற கர்ப்பிணியின் கணவர் படுகொலை; காவல்துறை விசாரணை

உடனே அவரது வாயில் இருந்த துண்டை எடுக்கும் பொழுது வாயில் இருந்து வெளியே வந்த ரத்தம் எனது நைட்டி மற்றும் எனது மூத்த மகள் அணிந்திருந்த ஆடையிலும் பட்டது. உடனே நாங்கள் போர்வையால் எனது கணவரின் உடலை தலைவரை மூடி விட்டு கீழே இறங்கி நானும் எனது மகள்களும் எங்கள் வீட்டுக்கும், கந்தவேல் அவரது வீட்டிற்கும் சென்று விட்டோம். மேலும் ரத்தக்கரை படிந்த உடைகளை மாற்றி அருகில் இருந்த கழிவு நீரோடையில் வைத்துவிட்டு காலையில் எரித்து விடலாம் என முடிவு செய்தோம். 

அதிகாலை 5 மணி அளவில் உறவினர்களை அழைத்து எனது கணவர் மாடியில் இறந்து கிடக்கிறார். ஆனால் எனது கணவர் சாவில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் காவல் துறையினர் எங்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டதாலும், எங்களை எப்படியும் கண்டுபிடித்து விடுவார்கள் என பயந்து நாங்கள்தான் கொலை செய்தோம் என காவல் துறையினரிடம் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டோம் என்று பாக்கியலட்சுமி தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios