எவ்வளவு சொல்லியும் கேட்காமல் மாமியாருடன் உல்லாசமாக இருந்த ஆட்டோ ஓட்டுநர்.. கடுப்பில் மருமகன் செய்த காரியம்..!
மாமியார் ஈஸ்வரியிடம் மணிவண்ணன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனை பலமுறை மருமகன் பிரகாஷ் கண்டித்தும் மணிவண்ணன் தொடர்ந்து பிரகாஷின் மாமியாருடன் உல்லாசமாக இருந்து கொண்டு பழகி வந்தார்.
மாமியாருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த ஆட்டோ டிரைவரை அரிவாளால் வெட்டிய மருமகன் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை புளியந்தோப்பு கே.எம்.கார்டன 13வது தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன்(40). இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் காலை புளியந்தோப்பு கே.எம்.காலனி 13வது தெருவில் ஆட்டோ ஓட்டி கொண்டு வந்தபோது இரண்டு நபர்கள் வழிமறித்து மணிவண்ணனை சரமாரியாக வெட்டியுள்ளனர்.இதில், ரத்த வெள்ளத்தில் சாய்ந்த மணிவண்ணன் சிறிது நேரத்திலேயே மயக்கமடைந்தார்.
இதையும் படிங்க;- கணவனுக்கும்,கள்ளக்காதலனுக்கும் டிமிக்கி கொடுத்து உல்லாசம்.. 17 வயது சிறுவன் செய்த காரியம்.. திடுக்கிடும் தகவல்
இதனையடுத்து, உடனே அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் தலை வலது தோள்பட்டை மார்பு உள்ளிட்ட இடங்களில் படுகாயமடைந்த மணிவண்ணன் அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் புளியந்தோப்பு சூளை தட்டாங்குளம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (எ) உள்ள குள்ளா(23) என்ற நபரின் மாமியார் ஈஸ்வரியிடம் மணிவண்ணன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதனை பலமுறை மருமகன் பிரகாஷ் கண்டித்தும் மணிவண்ணன் தொடர்ந்து பிரகாஷின் மாமியாருடன் உல்லாசமாக இருந்து கொண்டு பழகி வந்தார்.
இதையும் படிங்க;- மகன் வயசு பையனுடன் உல்லாசம்.. எச்சரித்த கணவர்.. 19 வயது கல்லூரி மாணவருடன் ஓட்டம் பிடித்த 40 வயது ஆண்டி..!
இதையும் படிங்க;- டபுள் டபுளா பேசி.. அங்காங்கே தொட்டு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை.. ஆசிரியரை போக்சோவில் தூக்கிய போலீஸ்.!
இதனை பலமுறை பிரகாஷ் கண்டித்தும் மணிவண்ணன் அதனை மீறி பழகி வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் தனது நண்பர் சரத் சந்திரன்(20) என்பவருடன் சேர்ந்து மணிவண்ணனை வெட்டியது தெரியவந்தது. போலீசார் பிரகாஷ் மற்றும் சரத் சந்திரன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.