Asianet News TamilAsianet News Tamil

மகன் வயசு பையனுடன் உல்லாசம்.. எச்சரித்த கணவர்.. 19 வயது கல்லூரி மாணவருடன் ஓட்டம் பிடித்த 40 வயது ஆண்டி..!

கணவர் வேலைக்கு செல்லும் நேரத்தில் இளம்பெண் மாணவரை தனது வீட்டிற்கு அழைத்து அவருடன் உல்லாசமாக இருந்து வந்தார். இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது. 

illegal love...40 year woman who ran with a 19 year college student
Author
Coimbatore, First Published Nov 22, 2021, 9:43 AM IST

19 வயது கல்லூரி மாணவருடன் திருமணமான 40 வயது பெண் ஓட்டம் பிடித்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் மாயமான கல்லூரி மாணவர் மற்றும் திருமணமான பெண்ணையும் தேடி வருகின்றனர்.

கோவை பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் 40 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 22 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கணவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்நிலையில், இளம்பெண்ணுக்கு சர்ச்சுக்கு சென்று வந்த போது அங்கே வந்த 19 வயது கல்லூரி மாணவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். 

illegal love...40 year woman who ran with a 19 year college student

கணவர் வேலைக்கு செல்லும் நேரத்தில் இளம்பெண் மாணவரை தனது வீட்டிற்கு அழைத்து அவருடன் உல்லாசமாக இருந்து வந்தார். இந்த கள்ளக்காதல் விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது. இதனால் அவர் தனது மனைவியை கண்டித்தார். உன் வயசுக்கு இது ஏற்றதல்ல  மகன் வயதுள்ள வாலிபருடன் இப்படி பழகக்கூடாது என எச்சரித்தார். ஆனால் இளம்பெண் கள்ளக்காதலை தொடர்ந்து வந்தார். இதன்காரணமாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த விவகாரம் தெரிந்து உறவினர்கள், நண்பர்கள் கண்டித்துள்ளனர். அதிக வயதாகி விட்டது இந்த நிலையில் இப்படி நடந்தால் குடும்ப மானம் போய்விடும் என எச்சரித்தனர். 

illegal love...40 year woman who ran with a 19 year college student

ஆனால், வீட்டில் இருந்த இளம்பெண் திடீரென மாயமாகி விட்டார். இதனையடுத்து அவரை அவரது கணவர் அக்கம் பக்கத்தில் தேடினார். அப்போது இளம்பெண் 19 வயது கல்லூரி மாணவருடன் ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இது குறித்து பெண்ணின் கணவர் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் 19 வயது கல்லூரி மாணவருடன் ஓட்டம் பிடித்த தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவருடன் ஓட்டம் பிடித்த 40 வயது பெண்ணை தேடி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios