Asianet News TamilAsianet News Tamil

எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. கணவர் கண்டித்ததால் மனைவி என்ன செய்தார் தெரியுமா?

சென்னை பல்லாவரம் கண்ணபிரான் கோயில் 8வது தெருவை சேர்ந்தவர் பெருமாள் (40). இவருக்கு திருமணமாகி ராஜலட்சுமி (36) என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். ராஜலட்சுமி அதே பகுதியில் உள்ள தனியார் ஷீ தயாரிக்கும் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். அப்போது, ராஜலட்சுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

illegal love affair... Women suicide in chennai
Author
Chennai, First Published Jun 28, 2022, 9:33 AM IST

சென்னையில் கள்ளக்காதலை கண்டித்தததால் மனைவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை பல்லாவரம் கண்ணபிரான் கோயில் 8வது தெருவை சேர்ந்தவர் பெருமாள் (40). இவருக்கு திருமணமாகி ராஜலட்சுமி (36) என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். ராஜலட்சுமி அதே பகுதியில் உள்ள தனியார் ஷீ தயாரிக்கும் கம்பெனியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். அப்போது, ராஜலட்சுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

இதையும் படிங்க;- அட கொடுமையே.. நண்பர்களுடன் சேர்ந்து பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த குடிகார தந்தை...

இதையும் படிங்க;- நண்பன்தானே என நம்பிச் சென்ற இளம்பெண்.. வாயில் துணியை வைத்து பொத்தி தோப்புக்குள் மாறி மாறி கூட்டு பலாத்காரம்.!

illegal love affair... Women suicide in chennai

இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் நாளடைவில் கணவர் பெருமாளுக்கு தெரியவந்ததை அடுத்து மனைவியை கண்டித்துள்ளார். இதனால், கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.

இதையும் படிங்க;-  எவ்வளவு சொல்லியும் கேட்காமல் சர்ச்சில் வைத்து பாதிரியார் செய்த கேவலமான செயல்.. கதறிய சிறுமி..!

illegal love affair... Women suicide in chennai

இதனால் மன உளைச்சலில் ராஜலட்சுமி வீட்டில் யாரும் இல்லாதபோது தனது உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அவரது அலறல் சத்ததம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைத்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 90 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த ராஜலட்சுமி நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios