Asianet News TamilAsianet News Tamil

நண்பன்தானே என நம்பிச் சென்ற இளம்பெண்.. வாயில் துணியை வைத்து பொத்தி தோப்புக்குள் மாறி மாறி கூட்டு பலாத்காரம்.!

அவரது வாயில் துணியை வைத்து பொத்தி  முந்திரி தோப்புக்குள் வைத்து மாறி மாறி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். நடந்த சம்பவத்தை  வெளியில் சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். பின்னர், வீட்டுக்கு தாமதமாகச் இளம்பெண் அழுதுகொண்டே நடந்த சதத்பவங்களை பெற்றோரிடம் கூறியுள்ளார். 

young woman gang rape...police Arrested in thanjavur
Author
Thanjavur, First Published Apr 30, 2022, 11:50 AM IST

தஞ்சை அருகே இளம்பெண்ணை முந்திரி தோப்புக்குள் தூக்கி சென்று மாறி மாறி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
பள்ளி நண்பன்

தஞ்சை மாவட்டம் வல்லம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 22 வயதுடைய இளம்பெண் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 11-ம் தேதி வேலை முடிந்து இரவு 10 மணிக்கு வீட்டுக்கு செல்ல புது  பேருந்து நிலையம் காத்திருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த அவருடன் பள்ளியில் படித்தவரும், நண்பருமான தஞ்சை அருகே மேட்டுப்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் கொடியரசன்(25) இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்வதாக கூறினார். சிறுவயதில் இருந்தே கொடியரசன் பழக்கம் என்பதால் அவரை நம்பி அந்த இளம்பெண்ணும் அவரது இருசக்கர வாகனத்தில் ஏறியுள்ளார்.

young woman gang rape...police Arrested in thanjavur

கூட்டு பால்காரம்

சிறிது தூரம் சென்றதும் வழக்கமான பாதையில் செல்லாமல் கொடியரசன் வேறுபாதையில் சென்றதால் சந்தேகமடைந்த பெண் இதுபற்றி கேட்டபோது, இந்த வழியாகவும் செல்லலாம் எனக் கூறி அப்பகுதியிலிருந்த முந்திரி தோப்புக்கு சென்று  இருசக்கர வாகனத்தை நிறுத்தினார். அப்போது அங்கு ஏற்கனவே கொடியரசனின் நண்பர்களான சுகமார், சாமிநாதன், கண்ணன் உள்ளிட்டோர் இருந்துள்ளனர். 

கொலை மிரட்டல்

அவர்களை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண் கூச்சலிட்டார். இதையடுத்து அவரது வாயில் துணியை வைத்து பொத்தி  முந்திரி தோப்புக்குள் வைத்து மாறி மாறி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். நடந்த சம்பவத்தை  வெளியில் சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். பின்னர், வீட்டுக்கு தாமதமாகச் இளம்பெண் அழுதுகொண்டே நடந்த சதத்பவங்களை பெற்றோரிடம் கூறியுள்ளார். 

young woman gang rape...police Arrested in thanjavur

கைது

பின்னர், அந்த இளம்பெண்ணின் பெற்றோர்கள் நியாயம் கேட்க சென்றபோது கட்டப்பஞ்சாயத்திற்கு வந்த இரண்டு பேர் அந்த இளம்பெண்ணையும், அவரது பெற்றோர்களையும் மிரட்டியுள்ளனர்.  இதையடுத்து பெற்றோருடன் அந்த பெண் வல்லம் டிஎஸ்பி பிருந்தாவிடம் கடந்த 12-ம் தேதி புகார் அளித்தார். இதுபற்றி தீவிர விசாரணை நடத்திய டிஎஸ்பி பிருந்தா மற்றும் வல்லம் போலீசார் பலாத்காரம், கொலை மிரட்டல், வன்கொடுமை உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கொடியரசன், சாமிநாதன், தமிழரசன் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios