Asianet News TamilAsianet News Tamil

அடிக்கடி ஓயாத உல்லாசம்.. குடிபோதையில் வந்து டார்ச்சர் செய்த கள்ளக்காதலனால் பெண் செய்த காரியம்..!

நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் அந்த பெண் வீட்டிற்கு வந்த சந்திரசேகரன் அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது சந்திரசேகரன் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

illegal love affair.. Women suicide in chennai
Author
Chennai, First Published Jun 23, 2022, 2:50 PM IST

குடிபோதையில் வந்த கள்ளக்காதலன் தகராறில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காப்பாற்ற முயன்ற கள்ளக்காதலனும் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 

சென்னை பெரம்பூர் மேல்பட்டி பொண்ணப்பன் தெரு பகுதியை சேர்ந்தவர் பெண் ஒருவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அந்த பெண் அதே தெருவில் சொந்தமாக ஜூஸ் கடை நடத்தி வருகிறார். அவரது வீட்டின் அருகே வசிக்கும் சந்திரசேகர்(30) என்ற நபருடன் சித்ராவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

இதையும் படிங்க;- ஒரே வீட்டில் தங்கி உல்லாசமாக இருந்த கள்ளக்காதல் ஜோடி.. நள்ளிரவில் வந்த கணவர்..அப்புறம் நடந்ததை மட்டும் பாருங்க

illegal love affair.. Women suicide in chennai

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் அந்த பெண் வீட்டிற்கு வந்த சந்திரசேகரன் அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது சந்திரசேகரன் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சித்ரா தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தனக்குத்தனே தீ வைத்துக்கொண்டார். அருகில் இருந்த சந்திரசேகரன் அவரை காப்பாற்ற முயற்சி செய்தார். இதில் இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. இருவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து இருவர் மீதும் பற்றிய தீயை அணைத்தனர்.

illegal love affair.. Women suicide in chennai

பின்னர் இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். அங்கு 90 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். கள்ளக்காதலன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க;- கணவனை பிரிந்து ஆட்டோ டிரைவருடன் கள்ளக் காதல்.. நள்ளிரவில் உல்லாசத்தின் போது நடந்த பயங்கரம்..

Follow Us:
Download App:
  • android
  • ios