Asianet News TamilAsianet News Tamil

கணவர் வேலைக்கு செல்லும் நேரத்தில் வாலிபரை வீட்டுக்கு வரவழைத்து உல்லாசம்! சிக்கிய மனைவி! இறுதியில் நடந்த துயரம்

கோவை மாவட்டம் காட்டூரை சேர்ந்த 42 வயது பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர். பெண்ணின் கணவர் சமையல்காரராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவிக்கும் வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது.

illegal love affair...Wife suicide in coimbatore
Author
First Published Nov 3, 2022, 8:44 AM IST

கணவர் வேலைக்கு சென்ற நேரத்தில் மனைவி வாலிபரை வீட்டிற்கு வரவைத்து உல்லாசமாக இருந்த சம்பவத்தை தட்டிக்கேட்டதால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாவட்டம் காட்டூரை சேர்ந்த 42 வயது பெண். இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர். பெண்ணின் கணவர் சமையல்காரராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவிக்கும் வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. கணவர் வேலைக்கு செல்லும் நேரத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அந்த வாலிபரை வீட்டுக்கு வரழைத்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார். 

இதையும் படிங்க;- தினமும் குடித்துவிட்டு டார்ச்சர்.. தொல்லை கொடுத்த குடிகார மகனை கூலிப்படை வைத்து போட்டு தள்ளிய பெற்றோர்.!

illegal love affair...Wife suicide in coimbatore

இந்நிலையில், இவர்களது கள்ளக்காதல் விவகாரம் கணவருக்கு தெரியவந்தது. இதனையடுத்து, மனைவியை கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று மீண்டும் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த பெண்ணின் கணவர் கோபித்துக்கொண்டு  வெளியே சென்றுவிட்டார். கணவர் வெளியே சென்றதால் மனவேதனை அடைந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  

இதையும் படிங்க;-   அந்த விஷயத்துக்கு மட்டும் ஒத்துக்க மாட்டேன்! பிடிவாதம் பிடித்த கள்ளக்காதலி! மனவேதனையில் வாலிபர் எடுத்த முடிவு

illegal love affair...Wife suicide in coimbatore

இதுதொடர்பாக போலீசாருக்கு கணவர் தகவல் தெரிவித்தார். சம்ப இடத்ததிற்கு விரைந்த போலீசார் தூக்கில் தொங்கிய மனைவியின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க;-  காதலனை கொலை செய்தால் போலீசில் சிக்காமல் இருப்பது எப்படி? கிரீஷ்மா கூகுளில் தேடியது அம்பலம்..!

Follow Us:
Download App:
  • android
  • ios