வெளிநாட்டில் கணவன்.. உறவுக்கார இளைஞர்களுடன் ஷிப்ட் போட்டு உல்லாசம் அனுபவித்த மனைவி.. இறுதியில் பயங்கரம்.
கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனை கள்ளக்காதலன்களுடன் சேர்ந்து மனைவி கொலை செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த கொடூரம் நடந்துள்ளது.
கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனை கள்ளக்காதலன்களுடன் சேர்ந்து மனைவி கொலை செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த கொடூரம் நடந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே சிங்க நேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் பிச்சைக்கனி, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த சாந்தி என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக பிச்சைக்கனி வெளிநாட்டில் தங்கி அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வந்தார்.
கணவனைப் பிரிந்து தனிமையில் வாடிய மனைவி சாந்தி உறவுக்காரர்களான பார்த்திபன் மற்றும் கலை மோகன் ஆகிய இருவருடனும் பழகி வந்தார், உடல் தேவைக்காக இருவருடனும் திருமணத்துக்கு புறம்பான உறவில் அவர் ஈடுபட்டு வந்தார், இருவரையும் தனித்தனியாக சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தார், இந்நிலையில் வெளிநாட்டில் இருந்த கணவர் மனைவி மக்களை பார்க்க மே 25ஆம் தேதி திடீரென சொந்த ஊருக்கு வந்தார். கணவனின் வருகை சாந்தியின் உல்லாச வாழ்க்கைக்கு இடையூறாக அமைந்தது. இதனால் கள்ளக்காதலன்களை சந்திக்க முடியாமல் தவித்து வந்தார்.
இதையும் படியுங்கள்: பேராசிரியை மீது சபலம்.. கல்லூரி முதல்வர் செய்த மட்டமான காரியம்.. தூக்கி உள்ளே வைத்த போலீஸ்.
கணவர் ஊருக்கு செல்லும் வரை சந்திக்க முடியாது என கள்ளக்காதலன்களிடம் கூறினார், அதில் கலைமகன் பிச்சைக்கனியை ஏன் ஒரேயடியாக தீர்த்துக்கட்டி விடக்கூடாது என ஆலோசனை கூறியதாக தெரிகிறது, இதைக் கேட்ட சாந்தி கணவரை தீர்த்து கட்டிவிட்டால் கள்ளக்காதலன்களுடன் நிம்மதியாக உல்லாச வாழ்க்கை வாழலாம் என முடிவு செய்தார், தனது கணவனை தீர்த்துக் கட்டி விடுமாறு காதலன்களிடம் கூறினார், இதனையடுத்து பார்த்திபனும், கலைமோகனும், மே 27 ஆம் தேதி சாந்தியின் கணவர் பிச்சைக்கனியை சந்தித்ததுடன், மது அருந்த வருமாறு அழைத்துள்ளனர். பிச்சைக்கனியும், அவர்களுடன் சென்றுள்ளார். அப்போது பிச்சைக்கனியை அவர்கள் குடிக்க வைத்தனர்.
இதையும் படியுங்கள்: யாரு அவன்..? மனைவி தலையில் அம்மி கல் போட்ட சந்தேக கணவன்.
பிச்சைக் கணிக்கு போதை தலைக்கேறியது, பின்னர் அவரை ஊருக்கு வெளியில் ஒதுக்குப்புறமான பகுதிக்கு அழைத்துச் சென்ற அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பச்சைக்கனியை சரமாரியாக வெட்டினர், அதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து பச்சைக்கனி உயிரிழந்தார் பின்னர் அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியில் வீசினர், இதனையடுத்து சாந்தி தனது கணவரை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார், இதனையடுத்து அது குறித்து விசாரித்த போலீசாருக்கு சாந்தி மீது சந்தேகம் ஏற்பட்டது, இதனையடுத்து அவரது செல்போனை ஆராய்ந்தனர், அவர் பார்த்திபன் மற்றும் கலை மோகனிடம் அதிக நேரம் பேசியது தெரிந்தது.
பின்னர் கலை மோகனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் நடந்த உண்மைகளை கூறினார், அதற்குள் சாந்தியும் பார்த்திபனும் தலைமறைவாயினர் பார்த்திபன் சிங்கப்பூருக்கு தப்பி சென்று விட்டார், மதுரையில் இருந்து அந்தமான் தப்பிக்க சாந்தி முயற்சி செய்த நிலையில் போலீசார் அவரை மதுரை விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.