Asianet News TamilAsianet News Tamil

பேராசிரியை மீது சபலம்.. கல்லூரி முதல்வர் செய்த மட்டமான காரியம்.. தூக்கி உள்ளே வைத்த போலீஸ்.

உடலுறவுக்கு வருமாறு அழைத்து கடந்த 2 ஆண்டுகளாக ச*** டார்ச்சர் செய்து வந்த கல்லூரி முதல்வர் மீது  பேராசிரியை ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.  இப்புகாரையடுத்து இந்த பாலியல் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
 

A college principal was arrested for giving sex torture to a college professor in Maharashtra
Author
Maharashtra, First Published Jul 29, 2022, 9:01 PM IST

உடலுறவுக்கு வருமாறு அழைத்து கடந்த 2 ஆண்டுகளாக ச*** டார்ச்சர் செய்து வந்த கல்லூரி முதல்வர் மீது  பேராசிரியை ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.  இப்புகாரையடுத்து இந்த பாலியல் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்று படித்திருக்கிறோம், தாய் தந்தைக்கு அடுத்து இந்த உலகில் ஒரு முக்கிய உறவு இருக்கிறது என்றால் அது ஆசிரியர் மாணவர் உறவாகத்தான் இருக்கும், கடவுளை விட ஒருபடி முன்னே வைத்து  ஆசிரியர்கள் வணங்கப்படுகின்றனர், மாணவர்களுக்கு கல்வி கற்பித்து அறிவுக்கண் திறக்கும் ஆசிரியர்கள் தாய் தந்தையருக்கு அடுத்த நிலையில் போற்றப்படுகின்றனர். 

ஆனால் இத் துறையில் இருப்பவர்கள் சிலர் தங்களின் உன்னத கடமைகளை மறந்து விட்டு படிக்கும் மாணவிகளிடம் பாலியல் சீண்டல் செய்வது, தங்களுடன் பணியாற்றும் சக ஆசிரியைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது, போன்ற தீய வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

A college principal was arrested for giving sex torture to a college professor in Maharashtra

பல நேரங்களில் இது போன்ற சம்பவங்கள் வெளியில் தெரியாமலேயே போய்விடுகின்றன, சில நேரங்களில் பாதிக்கப்படுபவர்கள் துணிந்து புகார் கொடுக்க முன்வரும்போது இது போன்ற அவலங்கள் வெளிச்சத்திற்கு வருகிறது. இந்த வரிசையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்லூரி முதல்வரின் செக்ஸ் டார்ச்சருக்கு ஆளாகி வந்த பேராசிரியை துணிந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். 

இதையும் படியுங்கள்: வெளிநாட்டில் கணவன்.. உறவுக்கார இளைஞர்களுடன் ஷிப்ட் போட்டு உல்லாசம் அனுபவித்த மனைவி.. இறுதியில் பயங்கரம்.

முழு விவரம் பின்வருமாறு:-  மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட் மாவட்டத்தில் மகா வித்யாலயா என்ற கல்லூரி இயங்கி வருகிறது, அங்கு பல ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர், அதில் பணியாற்றிவரும் பேராசிரியை ஒருவரை கல்லூரியின் முதல்வர் யஸ்வந்த் கடந்த இரண்டு ஆண்டுகளாக உடலுறவுக்கு வருமாறு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதையும் படியுங்கள்: சக்தி பள்ளி ரவிக்குமார், சாந்தி செல்போனை ஆராய்ந்தால் உண்மை தெரிந்து விடும்.. அடித்து சொல்லும் ஸ்ரீமதி தாய்.

தான் அழைக்கும் போது தன்னுடன் உல்லாசத்துக்கு வர வேண்டுமென்றும் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றால் வேறு கல்லூரிக்கு டிரான்ஸ்பர் செய்துவிடுவேன் என்றும் கல்லூரி முதல்வர் மிரட்டி வந்துள்ளார், கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு வகையில் அந்தப் பேராசிரியருக்கு முதல்வர் நெருக்கடி கொடுத்து வந்துள்ளார்.

A college principal was arrested for giving sex torture to a college professor in Maharashtra

இந்நிலையில் முதல்வரின் தொல்லை அதிகரித்ததால் வேறு வழியின்றி அந்த பேராசிரியை அதுகுறித்து போலீசில் புகார் செய்துள்ளார்  புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்கு பதிவு செய்து  கல்லூரி முதல்வரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். பின்னர் குற்றத்திற்கான முகாந்திரம் இருப்பதை அறிந்த போலீஸார் அந் நபரை கைது செய்துள்ளனர். அந்த கல்லூரி காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் சவானுக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios