Asianet News TamilAsianet News Tamil

5ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை..வசமாக சிக்கிய 59 வயது ஆசிரியர்..வயசான காலத்துல இது தேவையா ?

வீடு.பள்ளி,அலுவலகம் என எங்கு பார்த்தாலும் பெண்களுக்கு எதிரான ‘பாலியல்’ தொல்லைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. 2,3 வயது குழந்தைகள் ;முதல் வயதான மூதாட்டிகள் வரை அனைவருக்கும் பாலியல் தொல்லைகள் தொடர்ந்து கொடுக்கப்பட்டு வருகிறது. 

Government school headmaster fired for molesting students in Nagercoil
Author
Nagercoil, First Published Apr 29, 2022, 12:30 PM IST

நாகர்கோவில் அருகே பறக்கை பகுதியை சேர்ந்தவர் நித்ய லட்சுமணவேல் (வயது 59). இவர் நாகர்கோவிலில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே உள்ள ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றினார்.  இந்தநிலையில் அதே பள்ளியில் படிக்கும் 5-ம் வகுப்பு மாணவிகளிடம் அவர் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களின் பெற்றோரிடம் கூறினர். 

Government school headmaster fired for molesting students in Nagercoil

அதைத்தொடர்ந்து மாணவிகளின் பெற்றோர்கள், குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அரசு பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் இதுபற்றி நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் புகார் செய்தனர்.

Government school headmaster fired for molesting students in Nagercoil

 அதன்பேரில் நித்ய லட்சுமணவேல் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதற்கிடையே தலைமை ஆசிரியர் நித்ய லட்சுமணவேல் மீது துறை ரீதியான நடவடிக்கை பாய்ந்துள்ளது. அவர் பணி நிறைவு பெற இன்னும் 10 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் நேற்று அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருக்கிறது.

இதையும் படிங்க : பல்டி அடித்த எடப்பாடி.. அதிர்ச்சியில் ஓபிஎஸ் தரப்பு.. கொடநாடு கொலை வழக்கில் சிக்குவது யார் ?

Follow Us:
Download App:
  • android
  • ios