Asianet News TamilAsianet News Tamil

மனைவி நடத்தையில் தீராத சந்தேகம்.. தட்டிக்கேட்ட மாமனாரை ஓட ஓட விரட்டி கொன்ற மருமகன்.. செங்கல்பட்டில் பயங்கரம்

மதுபோதையில் இருந்த மருமகன் மாமனார் மற்றும் மாமியாரை கொடூரமாக தாக்கினார். இதில், மாமனார் உயிரிழந்த சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 

Father-in-law  murder..son-in-law absconding
Author
Chengalpattu, First Published Aug 2, 2022, 2:11 PM IST

மதுபோதையில் இருந்த மருமகன் மாமனார் மற்றும் மாமியாரை கொடூரமாக தாக்கினார். இதில், மாமனார் உயிரிழந்த சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம் பொன்விளைந்த களத்தூர், பழைய காலனி பகுதியை சேர்ந்தவர் துலுக்காணம் (65). இவரது மனைவி சம்பூர்ணம் (58). இவர்களுடைய மகள் ஜெயந்தி(30). கடந்த 12 வருடங்களுக்கு முன்பு பொன்விளைந்த களத்தூர் பகுதியில் உள்ள டார்ஜன் (35) என்பவருக்கு ஜெயந்தியை திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.  இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

இதையும் படிங்க;- மனைவி நடத்தையில் தீராத சந்தேகம்.. தட்டிக்கேட்ட மாமனாரை ஓட ஓட விரட்டி கொன்ற மருமகன்.. செங்கல்பட்டில் பயங்கரம்

Father-in-law  murder..son-in-law absconding

மதுவுக்கு அடிமையான டார்ஜன் பணம் கேட்டு தொந்தரவு செய்து மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மனைவி ஜெயந்தி நடத்தை மீது கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 2 மாதத்திற்கு மேலாக கணவன் மற்றும் மனைவிக்கு இடையே தினமும் சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து ஜெயந்தியின் தாய் தந்தை இருவரும் டார்ஜனை தொடர்ந்து கண்டித்து வந்துள்ளனர். இதனால், போதையில் இருந்த டார்ஜன் ஆத்திரமடைந்து தனது மாமனார் துலுக்காணம் மற்றும் மாமியார் சம்பூர்ணம் ஆகிய இருவரை சரமாரியாக கட்டை மற்றும் வீட்டில் இருந்த கத்தி ஆகியவற்றால் தாக்கியுள்ளார். இதனையடுத்து, அக்கம் பக்கத்தினர் சண்டையை விலக்கி விட்டனர். 

இதையும் படிங்க;-  பள்ளி மாணவி 10 மணி நேரம் மாறி மாறி கூட்டு பலாத்காரம்.. வேலை முடிந்ததும் சாலையில் தூக்கி வீசப்பட்ட கொடூரம்.!

Father-in-law  murder..son-in-law absconding

ஆனாலும், மதுபோதையில் இருந்த டார்ஜன் தனது மாமியாரை சரமாரியாக தாக்கி விட்டு, மாமனாரையும் விரட்டிக்கொண்டு கட்டையால் பலமாக தலையில் தாக்கியுள்ளார். இதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த மாமனார் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். மருமகன் தாக்கியதில் படுகாயமடைந்த சம்பூர்ணத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.  சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் துலுக்காணம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, தலைமறைவாக உள்ள டார்ஜனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க;-  ஃபர்ஸ்ட் நைட் முடிந்த மறுநாளே இளம்பெண் செய்த காரியம்.. 15 லட்சத்தை இழந்த புதுமாப்பிள்ளை கதறல்.!

Follow Us:
Download App:
  • android
  • ios