Asianet News TamilAsianet News Tamil

திருச்சியில் பயங்கரம்.. குழந்தைகள் கண்முன்னே ரவுடி சரமாரியாக வெட்டி படுகொலை.. அப்பா.. அப்பா.. கதறல்.!

திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் பகுதியை சேர்ந்தவர் பரணிதரன். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. 

Famous rowdy murder in trichy tvk
Author
First Published Feb 4, 2024, 7:40 AM IST

முன்விரோதம் காரணமாக குழந்தைகள் கண்முன்னே  பிரபல ரவுடி கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் பகுதியை சேர்ந்தவர் பரணிதரன். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இவர் தற்போது சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள நந்தா நகரில் வாடகை வீட்டில் மனைவி பிரதீபா, மகள், மகன் ஆகியோருடன் கடந்த ஒரு வருடமாக குடியிருந்து வருகிறார்.

இதையும் படிங்க: செம்பரம்பாக்கம் ஏரியில் தலை இல்லாமல் 6 துண்டுகலாக மிதந்த உடல்கள்! கொலை செய்யப்பட்டது யார்? வெளியான பகீர் தகவல்

இந்நிலையில் நேற்று காலை பரணிதரனின் மனைவி வேலைக்குச் சென்ற பிறகு பரணிதரன் தனது குழந்தைளுடன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது காரில் வந்த மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்தது. இதனையடுத்து குழந்தைகள் கண்முன்னே பரணிதரனை சரமாரியாக வெட்டினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த பரணிதரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். 

பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பித்து சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பரணிதரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

இதையும் படிங்க: பெண் குளிப்பதை ரகசிய கேமரா மூலம் அங்குலம் அங்குலமாக ரசித்த ஹவுஸ் ஓனர்.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?

விசாரணையில் குழுமணியைச் சேர்ந்த ஆட்டோ சக்தி என்கின்ற சக்திவேல் மற்றும் பரணிதரன் ஆகியோருக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது தெரியவந்தது. இதன் காரணமாக சக்திவேல் தனது கூட்டாளிகளுடன் பரணிதனை வெட்டி படுகொலை செய்தது தெரியவந்தது. மேலும் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios