Asianet News TamilAsianet News Tamil

மனைவியை கதறவிட்டு கொன்ற கணவர்.! நடந்தது என்ன? வெளியான பகீர் தகவல்..!

சென்னை கொரட்டூர் சிவலிங்கபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ் (42). அப்பகுதியில் மளிகை நகை நடத்தி வருகிறார். இவரது மனைவி சியாமளா தேவி (36). இவர்களுக்கு இரண்டு மகன்கள் பள்ளியில் பயின்று வருகின்றனர். 

Doubtful of behavior.. Husband killed his wife tvk
Author
First Published Feb 9, 2024, 8:56 AM IST

சென்னையில் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்ட கணவர் மனைவியை கழுத்தை அறுத்து படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை கொரட்டூர் சிவலிங்கபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ் (42). அப்பகுதியில் மளிகை நகை நடத்தி வருகிறார். இவரது மனைவி சியாமளா தேவி (36). இவர்களுக்கு இரண்டு மகன்கள் பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பண நெருக்கடி காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மளிகை கடையை மூடிவிட்டார். இதனால் குடும்ப வறுமையின் காரணமாக சியாமளா தேவி, வீட்டின் அருகே உள்ள இ-சேவை மையத்தில் கடந்த 10 நாட்களாக பணியாற்றி வந்துள்ளார். 

இதையும் படிங்க: வீட்ல யாரும் இல்ல.. உல்லாசமா இருக்கலாம் வர்றியா! இளம்பெண்ணை நம்பி சென்ற இன்ஜினியர்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!

இந்நிலையில் சியாமளா தேவியின் நடத்தையில் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வழக்கம் போல நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் மனைவியை படுக்கை அறைக்கு அழைத்து சென்று காய்கறி வெட்டும் கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார். ரத்தம் பீறிட்டு வெளியே வந்த நிலையில் சியாமளா தேவி துடிதுடித்து உயிரிழந்துள்ளார். பின்னர் அவர் அங்கிருந்து தப்பித்தார். 

இதையும் படிங்க: தலைமை ஆசிரியர் செய்கிற வேலையா இது.. பள்ளி சிறுமிகளுக்கு ஆபாச படம் காண்பித்து பாலியல் தொல்லை..!

இந்த சம்பவம் தொடர்பாக அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர்,  சியாமளா தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சுரேஷை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios