53 வயது வெளிநாட்டுப் பெண்மீது ஆசை.. தனியாக வீடு எடுத்து பலமுறை உல்லாசம்.. வெறி தீர்ந்ததும் அவன் செய்த காரியம்
53 வயது வெளிநாட்டுப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை பலாத்காரம் செய்ததுடன் அந்தப் பெண்ணை இளைஞர் ஒருவர் மோசடி செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
53 வயது வெளிநாட்டுப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை பலாத்காரம் செய்ததுடன் அந்தப் பெண்ணை இளைஞர் ஒருவர் மோசடி செய்துள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்நிலையில் அந்த பெண் தன்னை ஏமாற்றி பாலியல் உறவில் ஈடுபட்டு வந்த நபர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அரியானா மாநிலம் குர்கானில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதை கட்டுப்படுத்த காவல்துறையும் அரசும் எத்தனையோ நடவடிக்கை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை, சிலர் அன்பை கருவியாக பயன்படுத்தி பெண்களை தங்கள் வலையில் வீழ்த்துகின்றனர். பின்னர் அவர்களின் பலவீனத்தை வைத்து அவர்களை தங்கள் விருப்பத்திற்கு வளைப்பது, அவர்களிடம் பாலியல் வக்கிரத்தைத் தீர்த்துக் கொள்வது போன்ற கொடூரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சிலர் காதல் என்ற போர்வையில் இதை அரங்கேற்றுகின்றனர், இன்னும் சிலர் நட்பு என்ற போர்வையில் பெண்களை இதுபோல் ஏமாற்றுகின்றனர்.
இந்த வரிசையில் அரியானா மாநிலத்தில் ஒரு பெண்ணிடம் நட்பாக பழகி அந்தப்பெண்ணை பாலியல் தேவைக்கு பயன்படுத்தி அந்த பெண்ணை நிராகதியாக கைவிட்டுள் சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதையும் படியுங்கள்: ஏற்காட்டில் அதிகரிக்கும் விபச்சாரம்..சுற்றுலா பயணிகள் ஷாக் !
முழு விவரம் பின்வருமாறு:- ஹரியானா மாநிலம் குர்கானில் தைவான் நாட்டைச் சேர்ந்த 53 வயது பெண் ஒருவர் தங்கி வசித்து வருகிறார், 2017 ஆம் ஆண்டு முதல் குர்கானில் உள்ள என்ஜிஓவில் பணியாற்றி வருகிறார், இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ரவீந்திரன் விஷ்வகர்மா என்பவருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது, அந்த பெண்ணுடன் ரவீந்திரன் மணிக்கணக்கில் தொலைபேசியில் உரையாடி வந்தார்.
இதையும் படியுங்கள்: 16 வயது சிறுமியை கதற வைத்த போலீஸ்காரர்.. மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம்
பின்னர் அவர்களுக்கு இடையே அது காதலாக மாறியது, எப்படியாவது அந்தப் பெண்ணை அடைய திட்டமிட்ட ரவீந்திர விஷ்வகர்மா, அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார், தானும் தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருவதால் இருவரும் திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தலாம் என அப்பெண்ணிடம் ரவீந்திரன் கூறினார், இந்நிலையில் இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தனர். ரவீந்திர விஷ்வகர்மா அந்தப் பெண்ணிடம் தனது பாலியல் வக்கிரத்தை தீர்த்து வந்தார், விரும்பியதையெல்லாம் உல்லாசத்தில் ஈடுபடுவது, அந்த பெண்ணிடம் பணத்தை பெற்று உல்லாச வாழ்க்கை அனுபவிப்பது என இருந்து வந்தார்.
பலமுறை அந்த பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக பலாத்காரம் செய்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்தப் பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தினார், இதனால் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது, ஒரு கட்டத்தில் ரவீந்திர விஷ்வகர்மா திருமணம் செய்து கொள்ள முடியாது என கூறியதாக தெரிகிறது. இதனால் ரவீந்திரன் தன்னை ஏமாற்றியதை உணர்ந்த அந்தப் பெண் தனக்கு நேர்ந்த அநீதி குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்நிலையில் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.