Asianet News TamilAsianet News Tamil

சிறுமியை ஸ்டேட் விட்டு ஸ்டேட் கூப்பிட்டு போய் ஆசைவார்தை கூறி ஆசை தீர ரூம் போட்டு உல்லாசம்! வெளியான பகீர் தகவல்

சென்னை அம்பத்தூரை அடுத்த கொரட்டூர் பகுதியை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி திடீரென காணவில்லை. எங்கு தேடியும் மகள் கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கொரட்டூர் காவல் நிலையத்தில் கடந்த 18ம் தேதி புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர். 

Child girl rape case...Youth arrested under Pocso Act
Author
First Published Mar 24, 2023, 2:26 PM IST

ஆசைவார்த்தை கூறி 16 வயது சிறுமியை ஆந்திராவுக்கு கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அந்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

சென்னை அம்பத்தூரை அடுத்த கொரட்டூர் பகுதியை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி திடீரென காணவில்லை. எங்கு தேடியும் மகள் கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் கொரட்டூர் காவல் நிலையத்தில் கடந்த 18ம் தேதி புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர். 

இதையும் படிங்க;- என்ன ராணி மாதிரி வச்சு பாத்துக்கிட்டாரே.. என் வாழ்க்கையை நாசம் செஞ்சவங்கள தூக்குல போடுங்க.. ஜெகன் மனைவி கதறல்

Child girl rape case...Youth arrested under Pocso Act

இந்நிலையில், சிறுமி ஆந்திர மாநிலம் தடாவில் இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே, அங்கு சென்ற போலீசார் சிறுமியையும், அவருடன் இருந்த வாலிபரையும் காவல் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர், சிறுமியிடம் விசாரணை நடத்திய போது  திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தன்னை ஆந்திர மாநிலம் தடாவிற்கு அழைத்து சென்று  ரூம் எடுத்து தன்னை வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் சிறுமி கூறியுள்ளார். 

இதையும் படிங்க;-  காதல் கணவரின் கழுத்தை அறுத்துவிட்டு! மனைவியும், கள்ளக்காதலனும் செய்த கேவலமான செயல்! சிக்கியது எப்படி தெரியுமா?

Child girl rape case...Youth arrested under Pocso Act

இதனையடுத்து,  வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த விமல் ராஜ் (22) போக்சோ சட்டத்தில் கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கபட்டார்.

Follow Us:
Download App:
  • android
  • ios