Asianet News TamilAsianet News Tamil

கணவன் தூங்கிய பின்... கள்ளக் காதலன் உடன் படுக்கை அறையில், நள்ளிரவில் மனைவி செய்த பயங்கர காரியம்.

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.  இந்த கொடூர சம்பவம் ஆந்திர மாநிலம் கர்னூலில் நடந்துள்ளது.

 

After leaving the husband to sleep, the wife invited the illegal lover to the bed room. and killed husband.
Author
Andhra Pradesh, First Published Jul 1, 2022, 7:16 PM IST

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.  இந்த கொடூர சம்பவம் ஆந்திர மாநிலம் கர்னூலில் நடந்துள்ளது.

பெரும்பாலான கொலை தற்கொலைகள் கள்ளக் காதலை மையமாக வைத்து அரங்கேறி வருகிறது. அழகான வாழ்க்கை இருப்பவர்கள் கூட அற்ப சுகத்துக்காக ஓடி வாழ்க்கையை சீரழித்துக் கொள்கின்றனர். 100 ஆண்டு திருமண பந்தத்தை விட தற்காலிக  சுகத்தைத் தேடி சிறைக்குச் செல்கின்றனர். இங்கு கணவர் அரசு ஊழியராக இருந்தார், நல்ல வாழ்க்கை கிடைத்தும் அது அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு பெண் ஒருவர் அற்ப சுகத்திற்காக தவறான பாதையில் சென்று, கணவனைக் கொலை செய்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. இது குறித்த முழு விவரங்கள் பின்வருமாறு:-

இதையும் படியுங்கள்: ஸ்டாலின் எப்போ ராஜினாமா செய்வாரோ.. உத்தவ் தாக்கரே கதி எப்ப வருமோ.? வயிற்றெரிச்சலில் இந்து முன்னணி.

After leaving the husband to sleep, the wife invited the illegal lover to the bed room. and killed husband.

ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டம், பன்யத்தை சேர்ந்தவர் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஷேக் ஜவகர் உசேன், அவருக்கு அதே பகுதியை சேர்ந்த அசினா என்ற மனைவியும், தமிமுன் என்ற மகனும், அர்பியா என்ற மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் ஹசீனாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த மகபூப் பாஷா என்ற நபருக்கும் இடையே கடந்த சில காலமாக திருமணத்துக்கு புறம்பான  தொடர்பு இருந்தது. கணவன் வீட்டில் இல்லாத போது இருவருட் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.  

இதையும் படியுங்கள்: அமித்ஷா இது தேவையா..? என் பேச்சை கேட்டிருந்தால்.. மகாராஷ்டிராவை பாஜக ஆண்டிருக்கலாம்.. குமுறும் உத்தவ்.

இதை அறிந்த ஜவகர் உசேன் பெரியவர்கள் முன்னிலையில் மனைவியை கண்டித்துள்ளார். தனது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளும்படி எச்சரித்தார், பின்னர் மகபூப் பாஷா அந்த கிராமத்திலிருந்தே அனுப்பப்பட்டார். இத்தனையும் நடந்து ஹசினா மாறவில்லை, தொடர்ந்து கள்ளக்காதலன் மகபூப் பாஷாவுடன் போனில் பேசி வந்தார். இதை கவனித்த ஜவகர் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார், தனது கள்ளக்காதலுக்கு கணவன் இடையூறு செய்வதை ஹசினா கொஞ்சம்கூட விரும்பவில்லை, ஒருநாள் தன் கணவனை தீர்த்துக் கட்ட முடிவு செய்த அவர், தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து அதற்கு திட்டமிட்டார். இம்மாதம் 13ஆம் தேதி கொலைக்கு ஸ்கெட்ச் போடப்பட்டது.

ஹசீனா தனது இரண்டு குழந்தைகளையும் தன் தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்தார். அன்று இரவு பக்கத்து ஊரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜவகர் இரவு 10 மணி அளவில் வீடு படுக்கையறையில் உறங்கி விட்டார். ஜவஹர் உறங்கிய பின்னர் தனது கள்ளக் காதலனுக்கு போன் செய்து வரவழைத்த ஹசினா கனவனை தூக்கத்திலேயே கழுத்தை நெறித்து கொலை செய்தார். அதன்பின்னர் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக கணவருக்கு  ஆஸ்துமா இருப்பதாகவும், மூச்சுவிட முடியாமல் சிரமப்படுவதாகவும், உறவினர்களிடம் தெரிவித்தார். அவசர அவசரமாக உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.

After leaving the husband to sleep, the wife invited the illegal lover to the bed room. and killed husband.

இது ஜவஹரின் தம்பி கரிமுல்லாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது, முறையாக மருந்து சாப்பிட்டு வந்த அண்ணன் எப்படி உயிரிழந்தார், அதற்கு வாய்ப்பே இல்லை என அண்ணி மீது புகார் கொடுத்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை அனுப்பி வைத்தனர். பின்னர் வந்த மருத்துவ அறிக்கையை ஆய்வு செய்ததில் கழுத்தை நெரித்து கொலை செய்திருப்பது தெரிந்தது. காதலுடன் சேர்ந்து கணவனை தான் கொலை செய்ததை ஹசினா ஒப்புக்கொண்டார். இந்நிலையில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios