Asianet News TamilAsianet News Tamil

காதலை ஏற்க மறுத்த இளம்பெண்.. ஆசிட் வீசிய சாமியார்.! அதிர்ச்சி சம்பவம் !

பெங்களூரு ஹெக்கனஹள்ளி கிராஸ் பகுதியில் வசித்து வருபவர் 25 வயது இளம்பெண். இவர் சுங்கதகட்டேயில் உள்ள நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்தார். 

A youth has been arrested in Tamil Nadu for allegedly throwing acid at a teenager in Karnataka
Author
India, First Published May 15, 2022, 5:05 PM IST

இந்த நிலையில் இளம்பெண்ணை, நாகேஷ் (வயது 29) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். மேலும் தனது காதல் குறித்து இளம்பெண்ணிடம் நாகேஷ் கூறியுள்ளார். ஆனால் நாகேஷின் காதலை ஏற்க இளம்பெண் மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த நாகேஷ் கடந்த ஏப்ரல் மாதம் 28-ந் தேதி, நிதி நிறுவனம் முன்பு வைத்து இளம்பெண் மீது திராவகம் வீசிவிட்டு தப்பி சென்றார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த இளம்பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

A youth has been arrested in Tamil Nadu for allegedly throwing acid at a teenager in Karnataka

இந்த சம்பவம் குறித்து காமாட்சிபாளையா போலிஸார் வழக்குப்பதிவு செய்தனர்.  மேலும் நாகேஷை கைது செய்ய 7 தனிப்படைகள் அமைக்கப்பட்ட பல்வேறு மாநிலங்களில் தேடிவந்தனர். குறிப்பாக நாகேஷ் ஆன்மிகவாதி என்று கூறப்பட்டதால் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திராவில் உள்ள கோவில்களில் நாகேசை போலிஸார் தேடிப்பார்த்தனர். இந்த நிலையில் தமிழ்நாடு திருவண்ணாமலையில் உள்ள ரமண மகரிஷி ஆசிரமத்தில் நாகேஷ் பதுங்கி இருப்பதாக காமாட்சிபாளையா போலிஸாருக்கு தகவல் கிடைத்தது. 

இதையடுத்து நேற்று அந்த ஆசிரமத்திற்கு சென்று போலிஸார் விசாரணை நடத்தினர்.  அப்போது காவி உடை அணிந்து இருந்த ஒரு வாலிபரின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவரை பிடித்து போலிஸார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் நாகேஷ் என்பதும், இளம்பெண் மீது திராவகம் வீசிவிட்டு ஆசிரமத்திற்கு பக்தர்போல் வேடம் அணிந்து வந்து தங்கியதும் தெரியவந்தது. 

A youth has been arrested in Tamil Nadu for allegedly throwing acid at a teenager in Karnataka

இதையடுத்து அவரை போலிஸார் கைது செய்து பெங்களூருவுக்கு அழைத்து வந்தனர். அப்போது ஹெங்கேரி தொங்கு பாலம் அருகே வந்த போது குற்றவாளி நாகேஷ் போலிஸாரை தாக்கி விட்டு தப்ப முயன்றார். இதனை அடுத்து போலிஸார் தப்ப முயன்ற நாகேஷின் வலது காலில் துப்பாக்கியல சுட்டு பிடித்தனர். இதனை அடுத்து காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.. கோரிக்கை மனுவை அளிக்கிறார் முதல்வர் ஸ்டாலின் !

இதையும் படிங்க : TNPSC : டிஎன்பிஎஸ்சி தேர்வில் மைனஸ் மார்க் இருக்கு.. மாணவர்கள் ஷாக்.! வெளியான அதிர்ச்சி தகவல் !

Follow Us:
Download App:
  • android
  • ios