Asianet News TamilAsianet News Tamil

அடப்பாவிகளா.. 80 வயது கிழவியை மாறி மாறி கூட்டு பலாத்காரம் செய்த கொடூரம்.. ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை..!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தாரமங்கலத்தில் வாழ்ந்து வரும் அந்த மூதாட்டி கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக விவசாய நிலத்தில் வேலை செய்து வந்திருக்கிறார்.  அப்போது அப்பகுதியில் இரண்டு இளைஞர்கள் மது அருந்தி கொண்டிருந்திருக்கிறார்கள்.

80 year grandmother gang raped...Police Arrest 2 people
Author
Salem, First Published Nov 2, 2021, 12:50 PM IST

சேலம் அருகே குடிபோதையில் இருந்த இளைஞர்கள் 80 வயது மூதாட்டையை பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, மூதாட்டி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தாரமங்கலத்தில் வாழ்ந்து வரும் அந்த மூதாட்டி கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக விவசாய நிலத்தில் வேலை செய்து வந்திருக்கிறார்.   அப்போது அப்பகுதியில் இரண்டு இளைஞர்கள் மது அருந்தி கொண்டிருந்திருக்கிறார்கள்.  இரண்டு இளைஞர்களுக்கும் மது போதை  தலைக்கு ஏறியது. இதனால், விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த இந்த 80 வயது மூதாட்டியை நோட்டமிட்டு வந்துள்ளனர்.

இதையும் படிங்க;- மாமியாரை மடக்கிய மருமகன்.. உல்லாசத்துக்கு கட்டாயப்படுத்தியதால் கொலை.. விதவையான 9 மாத கர்ப்பிணி மகள்.!

80 year grandmother gang raped...Police Arrest 2 people

இதையும் படிங்க;- ஆசை ஆசையாய் சென்ற கள்ளக்காதலன்.. 19 வயது இளைஞருடன் கள்ளக்காதலி உல்லாசமாக இருந்ததால் அதிர்ச்சி..!

அப்போது, யாரும் இல்லாத நேரத்தில் மூதாட்டை வாயை பொத்தி வலுக்கட்டாயமாக கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், அந்த மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததை பார்த்து இந்த இளைஞர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து, ஆபத்தான நிலையில் இருந்த மூதாட்டையை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மூதாட்டியின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். குற்றவாளிகளை பிடிக்க 7 தனிப்படை அமைத்து விசாரணை நடைபெற்று வந்தது.  இந்த விவகாரம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார்கள். 

80 year grandmother gang raped...Police Arrest 2 people

இதையும் படிங்க;- திருமணமான 100 பெண்களுடன் உடலுறவு.. 200 இளம் பெண்களுடன் காதல்.. 23 வயது இளைஞன் கைது.

இதனையடுத்து, போலீசார் பாணியில் விசாரணை நடத்தியதில் குடிபோதையில் மூதாட்யை பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  80 வயது மூதாட்டியை 2 இளைஞர்கள் கூட்டு பாலியல்  பலாத்காரம் செய்த சம்பவம் ஓமலூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios