Asianet News TamilAsianet News Tamil

ஆசை ஆசையாய் சென்ற கள்ளக்காதலன்.. 19 வயது இளைஞருடன் கள்ளக்காதலி உல்லாசமாக இருந்ததால் அதிர்ச்சி..!

அஞ்சலிக்கும் 19 வயதுடைய வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பால்ராஜ் மீன் பிடிக்க சென்றுவிட்டார். இதை அறிந்த அவரது பங்காளி மலையாளம் அன்றிரவு அஞ்சலியுடன் உல்லாசமாக இருப்பதற்காக அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். 

marriage women illegal love.. boyfriend arrest
Author
Trichy, First Published Aug 9, 2021, 7:22 PM IST

வேறு வாலிபருடன் உல்லாசமாக இருந்த கள்ளக்காதலி, இளைஞரை சரமாரியாக கள்ளக்காதலன் வெட்டி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள அசூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பால்ராஜ்(60). இவரது மூன்றாவது மனைவி அஞ்சலி(25). இந்நிலையில், பால்ராஜ் பங்காளியான பக்கத்து வீட்டை சேர்ந்த மலையாளம்(46) என்பவருக்கும் அஞ்சலிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. பணவர் இல்லாத நேரத்தில் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

marriage women illegal love.. boyfriend arrest

இதனிடையே, அஞ்சலிக்கும் 19 வயதுடைய வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பால்ராஜ் மீன் பிடிக்க சென்றுவிட்டார். இதை அறிந்த அவரது பங்காளி மலையாளம் அன்றிரவு அஞ்சலியுடன் உல்லாசமாக இருப்பதற்காக அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். 

marriage women illegal love.. boyfriend arrest

அப்போது, கள்ளக்காதலி, வாலிபருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆத்திரமடைந்த மலையாளம் அரிவாளை எடுத்து வந்து கள்ளக்காதலியின் காதில் வெட்டி உள்ளார். வாலிபரையும் அரிவாளால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், அவரது கழுத்தில் காயம் ஏற்பட்டது. இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, அரிவாளால் வெட்டிய மாலையாளம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios