Asianet News TamilAsianet News Tamil

60 வயதில் ஆபாச படங்களுடன் அலைந்த கிழவன்..! அலேக்காக தூக்கி கம்பி எண்ண வைத்த காவல்துறை..!

திருநெல்வேலி அருகே ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பரப்பியதாக முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

63-year-old man arrested for spreading blue film
Author
Kalakkad, First Published Feb 11, 2020, 3:35 PM IST

ஆபாச படம் பார்ப்பவர்கள் உலகவில் இந்தியாவில் தான் அதிகமானோர் இருப்பதாக சமீபத்தில் ஆய்வு ஒன்று வெளியாகியது. அதிலும் தமிழகத்தில் குழந்தைகள் ஆபாச படத்தை பலர் பார்ப்பதாக அதிர்ச்சி தகவல் வந்தது. இதனையடுத்து இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டது. அதன்படி ஆபாச படத்தை பரப்புபவர்களை காவலர்கள் அதிரடியாக கைது செய்தனர்.

63-year-old man arrested for spreading blue film

இந்தநிலையில் தற்போது நெல்லை மாவட்டத்தில் முதியவர் ஒருவர் சிறார் ஆபாச படங்களை பரப்பியதாக கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம் களக்காட்டைச் சேர்த்தவர் ஜவகர் அலி (வயது 63). இருசக்கர வாகனங்களுக்கு சீட் தைத்து கொடுக்கும் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது மொபைல் போனில் குழந்தைகள் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்து வந்துள்ளார். மேலும் அதை பலருக்கும் அனுப்பி இருக்கிறார். இதை சைபர் கிரைம் போலீசார் கண்டறிந்தனர். இதையடுத்து களக்காடு காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு ஜவகர் அலி அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

63-year-old man arrested for spreading blue film

ஆபாச படங்கள் பதிவிறக்கம் செய்து பரப்புவது தொடர்பான வழக்கில் முதலில் திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவர் கைது செய்யப்பட்டார். பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கு ஆபாச படங்களை இவர் பரப்பியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது. அதன்பிறகு சென்னையை சேர்ந்த 72 வயதான மோகன் என்னும் முதியவர் கல்லூரி மாணவிகளுக்கு ஆபாச படத்தை அனுப்பி சிக்கினார். கோவையில் இரண்டு பேர் கைதாகினர். பின் சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த சுமித்குமார் கல்ரா என்கிற தொழிலதிபர் கைது செய்யப்பட்டார்.

63-year-old man arrested for spreading blue film

தொடர்ந்து திருச்சியில் ஆபாச படங்களை தரவிறக்கம் செய்து பரப்பியதாக காதர்பாட்சா, ஷேக் அப்துல்லா என இரண்டு வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். பின் சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ஹரிஷ் என்கிற பி.எஸ்.சி பட்டதாரியும் கரூரில் வடமாநில வாலிபர் ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் அதள பாதாளத்திற்கு சென்ற காங்கிரஸ்..! அதிகமுறை ஆட்சியமைத்த கட்சிக்கு நேரும் அவமானம்..!

Follow Us:
Download App:
  • android
  • ios