இந்த வயசுலேயும் இப்படி ஒரு காரியமா.? 11ம் வகுப்பு பள்ளி மாணவியை 8 மாதம் கர்ப்பமாக்கிய 60 வயது கிழவன்.!
நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் அமைந்துள்ள மேங்கோ ரேஞ்ச் பகுதியில் சுதாகர் (60) முதியவர் வசித்து வருகின்றார். அதே பகுதியில், 11ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமி தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த முதியவர் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
60 வயதான முதியவர் 11ம் வகுப்பு படிக்கும் பள்ளி சிறுமியை 8 மாத கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக முதியவரை போலீசார் போச்சோவில் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் அமைந்துள்ள மேங்கோ ரேஞ்ச் பகுதியில் சுதாகர் (60) முதியவர் வசித்து வருகின்றார். அதே பகுதியில், 11ம் வகுப்பு படிக்கும் 17 வயது சிறுமி தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த முதியவர் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதையும் படிங்க;- 81 வயது கிழவன் உட்பட பள்ளி மாணவியை ஒருவர் பின் ஒருவராக சீரழித்த கொடூரம்.. விசாரணையில் வெளியான பகீர் தகவல்.!
இதில், அந்தப் பெண் 8 மாத கர்ப்பமாகியுள்ளார். இந்த கர்ப்பம் குறித்து சிறுமிக்கு தெரியாமல் இருந்த நிலையில் பெண்ணின் வயிறு பெரிதாவதை கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக கூறினர். இதனால், பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததனர். இந்த புகாரின் அடிப்படையில் முதியவர் சுதாகரை போக்சோவில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க;- தள்ளாத வயதில் 30 ஆண்டுகளாக கள்ளக்காதல்.. பேச மறுத்த கள்ளக்காதலியை துடிதுடிக்க கொன்ற 70 வயது கிழவன்..!