Asianet News TamilAsianet News Tamil

தொடரும் ஆபாச பட வேட்டை..! மதுரை வாலிபர்கள் அதிரடி கைது..!

ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பரப்பியதாக 600 பேர் பட்டியல் தயார் செய்யப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது மதுரையில் 3 பேர் ஆபாச பட சர்ச்சையில் கைதாகி இருக்கின்றனர்.

3 youth arrested in madurai for spreading porn videos
Author
Madurai, First Published Feb 27, 2020, 1:08 PM IST

சமீபத்தில் அமெரிக்காவின் புலனாய்வு பிரிவு ஆபாச படம் பார்ப்பவர்களை பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டது. அதில் உலகளவில் இந்தியாவில் தான் ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகளவில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்தியாவிலேயே தமிழகம் தான் அந்த எண்ணிக்கையில் முதலிடம் வகிக்கிறது. அதிலும் அதிர்ச்சி தரக்கூடிய செய்தி, தமிழகத்தில் சென்னையில் தான் அதிகளவிலானோர் ஆபாச படம் பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

3 youth arrested in madurai for spreading porn videos

தமிழகத்தில் ஆபாச படம் பார்ப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் குழந்தைகள் சம்பந்தமான படங்களை தேடி, தரவிறக்கம் செய்வதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் அறிக்கையை பார்த்து அதிர்ச்சியடைந்த மத்திய உள்துறை அமைச்சகம், அதை தமிழக காவல்துறைக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதனடிப்படையில் தமிழக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு காவலர்கள் நடவடிக்கையில் இறங்கினர். தமிழகத்தின் திருச்சி,கோவை,சென்னை, கரூர் உட்பட பலநகரங்களில் இருந்து ஏரளாமானோர் அதிரடியாக கைதாகினர்.

திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் கவலைக்கிடம்..!

3 youth arrested in madurai for spreading porn videos

ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பரப்பியதாக 600 பேர் பட்டியல் தயார் செய்யப்பட்டு அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது மதுரையில் 3 பேர் ஆபாச பட சர்ச்சையில் கைதாகி இருக்கின்றனர். ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த குமார் என்கிற வாலிபர் சமூக வலைத்தளங்களில் ஆபாச படங்களை பரப்பியதாக மகளிர் காவல்துறை கைது செய்துள்ளது. அவர் மீது போக்சோவில் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

3 youth arrested in madurai for spreading porn videos

அதேபோல மதுரையைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் என்கிற வாலிபர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாசப்படத்தை பகிர்ந்தாக கைதாகி உள்ளார். தொடர்ந்து செந்திகுமார் என்பவரும் ஆபாச படத்தை பரப்பியதாக கைதாகி இருக்கிறார். ஆபாச பட விவகாரத்தில் மதுரையில் அடுத்தடுத்து வாலிபர்கள் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திமுக எம்.எல்.ஏ திடீர் மரணம்..! அதிர்ச்சியில் அறிவாலயம்..!

Follow Us:
Download App:
  • android
  • ios