Asianet News TamilAsianet News Tamil

முடிவுக்கு வந்த 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' டீசர் சர்ச்சை! இயக்குனர் வெளியிட்ட தகவல்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடித்துள்ள 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' படத்தின் டீசர் நேற்று வெளியான நிலையில், இந்த படத்தின் இயக்குனர், டீசர் வெளியான தகவலே 45 நிமிடத்திற்கு பிறகு தான் தெரியும் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சர்ச்சை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
 

vijay sethupathi movie teaser issue solved
Author
Chennai, First Published Mar 13, 2021, 12:17 PM IST

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடித்துள்ள 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' படத்தின் டீசர் நேற்று வெளியான நிலையில், இந்த படத்தின் இயக்குனர், டீசர் வெளியான தகவலே 45 நிமிடத்திற்கு பிறகு தான் தெரியும் என அதிர்ச்சி தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சர்ச்சை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

மேலும் செய்திகள்: சீரியலுக்கு ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகை தேவயானி..! 15 வருடத்திற்கு பின் மீண்டும் அதே நடிகருடன் இணைகிறார்!
 

இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரகுநாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ள திரைப்படம் "யாதும் ஊரே யாவரும் கேளீர்". இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ் நடித்துள்ளார். படப்பிடிப்புகள் முழுவதும் முடிக்கப்பட்ட நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.  இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் மார்ச் 5 ஆம் தேதி வெளியானது. 

vijay sethupathi movie teaser issue solved

இந்நிலையில் டீசர் வெளியாகிறது என்பது குறித்த தகவல் தனக்கு தெரியாது என்றும், அந்த டீசருக்கும் எனக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை. நான் அந்த டீசர் ரிலீஸ் ஆகி 45 நிமிடங்கள் கழித்தே பார்த்தேன். திரும்பவும் மன்னிக்கவும் நான் வேறு வழியில்லாமல் அந்த டீசரை பற்றி பேசாமல் மௌனமாக கடந்து போகிறேன். உண்மையில் இந்த படத்தின் ஆன்மாவை உள்ளங்கையில் காட்ட கூடிய நான் கட் பண்ணிய டீசர் என்னிடம் இருக்கிறது. டப்பிங் செய்யப்படாமல் RR செய்யப்படாமல் di செய்யப்படாமல் அப்படியே ராவாக இருக்கிறது. என உணர்ச்சி பொங்க முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

மேலும் செய்திகள்: 'சுந்தரி' சீரியல் நாயகி கேப்ரில்லாவா இது? இளம் நடிகைகளையே டஃப் கொடுக்கும் ஸ்டைலிஷ் உடையில் கலக்குறாங்களே!
 

இதை தொடர்ந்து தற்போது இவர் வெளியிட்டுள்ள புதிய பதிவில்... அன்பார்ந்த நண்பர்களுக்கு, முந்தைய பதிவில் #யாதும்ஊரேயாவரும்கேளிர் டீசர் வெளியானதை தொடர்ந்து என் மனவருத்தத்தையும், தயரிப்பு தரப்பு கொடுக்கும் விளக்கத்தை அறிவிக்கிறேன் என்று பதிவிட்டிருந்தேன்.

vijay sethupathi movie teaser issue solved

அதை தொடர்ந்து .. நான் பதிவிட்ட மறுநாளில் இருந்து என் முக நூல் பக்கத்தை பார்க்க முடியவில்லை என்று சிலர் கூற ஆரப்பித்தார்கள். மறு நாள் இந்த எண்ணிக்கை கூடியது. அடுத்த நாள் என்னாலும் என் முக நூல் பக்கத்துக்குள் நுழைய முடியவில்லை. வெங்கட கிருஷ்ண ரோகாந்த் பெயரிலான கணக்கு முடக்கப்பட்டதாக காட்டியது.
அதன் பின் நீண்ட நேர போராட்டத்திற்கு என முகநூல் பக்கம் மீட்கப்பட்டது. ஆனால் அதில் எனது கடைசி பதிவான யாதும் ஊரே யாவரும் கேளிர் டீசர் பதிவு நீக்கப்பட்டிருந்தது. அதற்கு முந்தைய எனது பதிவான ஜனா சாரின் லாபம் ட்ரைலர் தான் எனது கடைசி அக்டிவிட்டியாக முகநூல் காட்டியது.

மேலும் செய்திகள்: சின்ன தல ரெய்னாவுடன் ஷிவாங்கியும் - ஷிவானியும்! பிரபல நடிகரின் காதலியும் கூட இருக்காங்களே! வைரல் புகைப்படம்!
 

என்ன நடந்திருக்கும் என்று ஊகிக்க பெரிய துப்பறியும் அறிவு ஒன்றும் தேவைப்படாது தான். இருந்தாலும் ஊகங்களின் பின்னால் நான் செல்ல தயாரகயில்லை. அமைதியாக இருந்தேன். நேற்று, இந்த படம் உருவாக்கத்தில் இருந்து இன்று வரை  இந்த ப்ராஜக்டின் முக்கிய காரணியாக இருக்கும் குமார் சார் போனில் பேசினார்.
சில அறிவுரைகள்... சில தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய விஷயங்கள்... அடுத்த செயல் திட்டங்கள் என்று எங்கள் உரையாடல் அடுத்த கட்டத்தை நோக்கி நகரத்தொடங்கி இருக்கிறது. சுமார் ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு ஆலுவலகம் செல்லப்போகிறேன். நல்லது. இனி நான் பேசப் போகும் விஷயம் தான் ரொம்ப முக்கியமானதாக நான் கருதுகிறேன். நான் அடிப்படையில் இயக்குநர் சங்க உறுப்பினர் இல்லை. 

vijay sethupathi movie teaser issue solved

பேராண்மையின் போது ஜனா சார் தற்காலிக உறுப்பினராக என்னை சேர்த்துவிட்ட போதும் அதை தொடராமல் விட்டதால் நான் இன்று இயக்குநர் சங்கத்தின் உறுப்பினர் இல்லை. அதனாலயே தவிர்க்க முடியாமல் இந்த விஷயத்தை பொதுவெளிக்கு கொண்டு வரும்படியாகிவிட்டது. இது முற்றிலும் ஒரு தவறான முன்னுதாரனம் என்பதை திரைத்துறை முன்னால் ஒப்புக்கொள்கிறேன். 
என் படத்து டீசரை என் முகநூல் பக்கத்தில் வெளியிட முடியாமலே போய்விடுமோ என்கிற மன உளைச்சல் இருந்தது...  இன்று நிலைமை மாறி இருக்கிறது. 20 லடசத்தை தாண்டிய பார்வையாளர்கள், பாராட்டுகள், கருத்துகள், எதிர்கருத்துகள் என்று முன்னேறி போய் கொண்டிருக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் டீசரை எனது முக நூல் பக்கத்தில் பதிவிடுகிறேன். தாமதமாக இந்த டீசர் பதிவிடப்படுகிறது என்றாலும் ஒரு இயக்குநரின் தன்மானத்தோடு பதிவிடப்படுகிறது. நன்றி வெங்கட கிருஷ்ண ரோகாந்த் என தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios