சீரியலுக்கு ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகை தேவயானி..! 15 வருடத்திற்கு பின் மீண்டும் அதே நடிகருடன் இணைகிறார்!
நடிகை தேவயானி நீண்ட இடைவெளிக்கு பின், ரீ-என்ட்ரி ஆகவுள்ள சீரியல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் அஜித், விஜய், விக்ரம் என பிரபல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து 90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தனர் நடிகை தேவயானி.
நடிகை தேவயானி மும்பையை பூர்வீகமாக் கொண்டவர் என்றாலும், அவருக்கு கை கொடுத்து தூக்கி விட்டது தமிழில் சினிமா தான்.
பார்க்கவே பக்கத்துக்கு வீட்டு பெண் போல் தோன்றும் எதார்த்தமான அழகு, இவரை தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் ஹீரோயினாக மாற்றியது. காதல் கோட்டை, சூர்யவம்வம், நீ வருவாய் என என்று, 75 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
வெள்ளித்திரையில் இருந்து திருமணம் ஆகி விலகிய பின்னர், சின்னத் திரையிலும் வெற்றி நாயகியாக வலம் வந்தார். குறிப்பாக இவர் நடித்திருந்த 'கோலங்கள்' சீரியல் இன்று வரை, இல்லத்தரசிகளால் மறக்க முடியாத சின்னத்திரை சித்திரம் போல் மனதை விட்டு நீங்காத ஒன்று.
கடைசியாக சன் டிவியில் ஒளிபரப்பான ‘ராசாத்தி’ சீரியலில் நடித்திருந்தார். பின்னர் அவ்வப்போது ஒரு சில படங்களில் தலைகாட்டி வந்தார் தேவயானி.
இந்நிலையில், பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள 'புது புது அர்த்தங்கள்' என்கிற தொடரில் நாயகியாக நடிக்க உள்ளார்.
இதுகுறித்த ப்ரோமோவில் அவர் கூறியபோது, புதுப்புது அர்த்தங்கள் தொடரில் நடிக்கிறேன். எனது கேரக்டர் முதல் அனைவரது கதாபாத்திரங்களும் மிகவும் நன்றாக இருக்கும். கதை மிகவும் அழகானது. எல்லோருக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன். என்னுடைய கேரக்டரைப் பற்றி இப்போது எதுவும் சொல்லமுடியாது.
என்னுடைய ரசிகைகளுக்கும் அனைத்து பெண்களுக்கும் பிடிக்கும்படி என்னுடைய கதாபாத்திரம் இருக்கும். 15 வருடங்களுக்குப் பின் சீரியல் நடிகர் அபிஷேக் உடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன். இத்தொடரில் அதிகம் எதிர்மறையான விஷயங்கள் இருக்காது. பாசிட்டிவ்வாக இருக்கும்." என்று கூறியுள்ளார்.